30 அடுக்கு மாடி ஹோட்டலுக்கு அடிக்கல்!
- Details
- Published on Saturday, 25 February 2012 07:30
- Hits: 56
கொழும்பு காலிமுகத்திடலில் 30 அடுக்கு மாடிகளைக் கொண்டதாக கட்டப்படவுள்ள சங்கிரி-லா நட்சத்திர அந்தஸ்துள்ள ஹோட் டலுக்கான அடிக்கல்நாட்டும் வைபவம் நேற்று நடைபெற்றது.
இதில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும்- சங்கிரி-லா ஏசியா தலைவர் குக் க்ஹன் இன் ஆகியோர் அடிக்கல் நட்டினர்.
பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன-கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.ஏ. முஸம்மில் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)