நேற்றைய தினம் அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
மாத்தறை மாவட்டத்தில் விசேடமாக முக்கிய நகரங்களுக்கு அப்பால் உள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளக்கூடியதென அடையாளம் காணப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம், பெருந்தெருக்கள், நீர்ப்பாசனம் பொதுவசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 2018 தொடக்கம் 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தேச நில்வலாவ எளிய திட்டத்துக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இதற்காக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.



















