ஏப்ரல் 23, 2021
sin eng youtube  twitter facebook

    புத்தாண்டில் கடமைப் பணிகளை ஆரம்பித்த ஜனாதிபதி அவர்கள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணிக்குழாமினருடன் சந்திப்பு Featured

    ஏப்ரல் 19, 2021

    பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டில் கடமைப் பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்தார்.

    சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் திட உறுதி மற்றும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

    பிறந்திருக்கும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு அமைச்சர்கள் மற்றும் பணிக்குழாமினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்தவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

    ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்திலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார்.

    அமைச்சர்கள், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி.ஏகொடவெலே, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீரஸ்வர பண்டார ஆகியோர் உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

    ஜனாதிபதி ஊடகப் பிரிவு

    2021.04.19

     

    340x250

    சமீபத்திய செய்திகள்

    dgi log front

    electionR2

    recu

    Desathiya