மட்டக்களப்பு மாவட்ட காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில் இன்று (20) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க பிரதம அதியாகக் கலந்து கொண்டு தொல்பொருள் பாரம்பரியம் தொடர்பாக விளக்கமளித்தார்.
மேலும் தொல் பொருள் சின்னங்களைப் பாதுகாத்தல் எனும் தலைப்பில் தொல்பொருளியல் திணைக்கள பதில் மேலதிக பணிப்பாளர் பிரசன்ன பீ. ரத்நாயக மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தொல்பொருள் திட்டம் தொடர்பாக ஆய்வு உத்தியோகத்தர் திருமதி முத்து தென்னகோன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து விளக்மளித்தனர்.



















