இதற்கமைவாக ,இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இகுளியாப்பிட்டி பொலிஸ் பிரிவு இன்று நள்ளிரவு முதல் தனிமைப்படுத்தப்படும். பிரதேசத்தின் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 10 சதவீதமான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளது என குளியாப்பிட்டி சுகாதார வைத்திய உத்தியோகத்தர் டொக்டர் உத்பல சங்கல்ப தெரிவித்துள்ளார்.




















