புத்தளம்-அனுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ 9 ஆம் கட்டை கொன்கிரீட் பாலத்திற்கு பதிலாக கட்டப்பட்ட இரும்பு பாலம் இன்று (03) பிற்பகல் முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாலப் பிரிவு, இராணுவம், கருவலகஸ்வெவ பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் பங்களிப்புடன் இது விரைவாகக் கட்டப்பட்டது.
புத்தளம் மாவட்ட ஊடகப் பிரிவு


