All Stories

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) சாரணர் குழுவின் தலைவர் கலாநிதி எம். சின் பின் பிடின் உள்ளிட்ட உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

 

பிராந்திய சாரணர் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இப்பிரதிநிதிகள் குழுவுடன், இலங்கையின் சாரணர் இயக்கத்தின் தொடர்ச்சியான அபிவிருத்தி மற்றும் அதனை கிராமிய மட்டம் வரை மேலும் விரிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

 

போதைப்பொருள் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய வேலைத்திட்டத்திற்கு, வெளிநாட்டு அனுபவங்கள் மற்றும் வெற்றிகரமான நடைமுறைகளைப் பகிர்ந்துகொண்டு, சாரணர் இயக்கத்தின் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும், அதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் சமர்ப்பிப்பதாகவும் ஆசிய-பசுபிக் பிராந்திய பிரதிநிதிகள் குழு இங்கு உறுதியளித்தது.

 

மேலும், 2027 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆசிய-பசுபிக் சாரணர் ஜம்போரியை இலங்கையில் நடத்துவது குறித்தும், அதற்கு அரசாங்கத்தின் ஆதரவை வழங்குவது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

 

இலங்கை சாரணர் சங்கத்தின் தலைவர் ரன்சிரி பெரேரா, பிரதம ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாநாயக்கார, உலக சாரணர் இயக்கத்தின் ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் உப தலைவர் தேவ் ராஜ் கிமிரே, ஆலோசகர் Wendel E. Avisado, இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதி பிரதம ஆணையாளர் கபில பெரேரா, குழுத் தலைவர் கமல்நாத் ஜினதாச, சர்வதேச ஆணையாளர் வைத்தியர் அசங்க எரியாவ, உதவிப் பிரதம ஆணையாளர் பிரபாத் குலரத்ன உள்ளிட்ட ஆசிய-பசுபிக் பிராந்திய சாரணர் குழுவின் பிராந்திய பணிப்பாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் இலங்கை சாரணர் சங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

.

உலக சாரணர் இயக்கத்தின் (WOSM) ஆசிய-பசுபிக் பிராந்திய (APR) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்

புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (2026 ஜூலை 17) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

 

புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு

பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் CCWE வழங்கும் பங்களிப்பு

பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் CCWE வழங்கும் பங்களிப்பு பாராட்டத்தக்கது

 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

 

2026 ஜூலை 17ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற, இலங்கை பெண் தொழில்முனைவோர் சபையினால் (Ceylon Chamber of Women Entrepreneurs - CCWE) ஏற்பாடு செய்யப்பட்ட CCWE Fashion Week & International Summit 2026 நிகழ்வின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பெண்களின் பங்களிப்பைக் கட்டுப்படுத்தும் தடைகளைத் தகர்த்து, அவர்களின் திறமைகளை இனங்காண்பதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் மற்றும் அவர்களைப் பலப்படுத்துவதற்கும் CCWE வழங்கும் பங்களிப்பு

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூலை 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை:

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 

2026 ஜூலை 18ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜூலை 18ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு