All Stories

கலாஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

கலா ஓயா ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் பெய்த கடும் மழை காரணமாக கலா ஓயா நீர்மட்டம் வெள்ள எச்சரிக்கையை நெருங்கியுள்ளது. மேலும் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது 17000 கன அடி வேகத்தில் நீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. தற்போது நீர்த் தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவுக்கு இணங்க எதிர்காலத்தில் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்பட வேண்டியேற்படலாம்.
 
இந்நிலை காரணமாக ஆற்றுப்படைகையை அண்மித்துள்ள ராஜாங்கனை, நொச்சியாகம, வனாத்தவில்லு மற்றும் கதுருவலகஸ்வெவ போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.
கலாஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

தெதுறுஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

தெதுறுஓயா ஆற்றுப் படுகை யின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக தெதுறுஓயாவின் நீர்மட்டம் வெள்ள அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்தும் நிலையை அண்மித்துள்ளது.

மேலும் ஓயாதெதுறு நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேறும் வான் கதவுகள் தற்போது நிமிடத்திற்கு 16000 கன அடி வேகத்தில் தெதுறுஓயாவிற்கு அனுப்பப்படுகிறது. தற்போது நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீர் கொள்ளளவைப் பொறுத்து, எதிர்காலத்தில் இந்த அளவை மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.

இந்நிலை காரணமாக ஆற்றுப் படுகையில் உள்ள வாரியபொல, நிகவரெடிய, மஹவ, கொபெயிகனே, பிங்கிரிய, பள்ளம், சிலாபம், ஆராச்சிகட்டுவ மற்றும் றஸ்னாயகபுர பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட வெள்ளப்பெருக்கின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாயம் காணப்படுகின்றது.

தெதுறுஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

கல் ஓயா ஆற்றுப் படுகையின் உயர் மற்றும் மத்திய பிரதேசங்களில் குறிப்பிடத்தக்க மழை காரணமாக, கல் ஓயாவின் நீர்மட்டம் வெள்ள மட்டத்திற்கு அண்மித்துள்ளது.
 
இந்த நிலையில் தாழ் நிலப் பகுதிகளில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, அம்பாறை, தமண, எராகம, மடுல்ல, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலமை அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்ஓயா ஆற்றுப் படுகை வெள்ள அனர்த்த எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

மல்வத்துஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

மல்வத்து ஓயாவின் ஆற்றுப் படுகையில் உயர் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் இன்று மாலை 4.00 மணியளவில் அதிக மழை பெய்துள்ளது. மேலும் அதிக மழை செய்து வருவதுடன் அதற்கு மேலதிகமாக நாச்சதீவு நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் வான் கதவுகள் திறக்கப்பட்டு தற்போது நிமிடத்திற்கு 3700 கன அடி வேகத்தில் வான் பாய்கிறது.
மல்வத்துஓயா ஆற்றுப் படுகை வெள்ள எச்சரிக்கை தொடர்பான நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அறிவித்தல்

நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 54 பிரதான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

இன்று (19) மு.ப.9.00 மணியளவில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நிருவகிக்கப்படும் பிரதான 73 நீர்த்தேக்கங்களில் 54 நீர்த்தேக்கங்களில் வான் பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ( நீர் முகாமைத்துவம்) எச். எப். பி. எஸ். டி. ஹேரத் தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் 54 பிரதான  நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக அனுராதபுரம் மாவட்டத்தின் பதவிய, புத்தன்கல பிரதேசங்களில் கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள் 2 ஐ தயார் நிலையில் வைப்பதற்கு கடற்படையினரால் ஜனவரி 15 ஆம் திகதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் காணப்படுகின்றன

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது.

இலங்கையில் ஊடகவியலாளர்களின் ஊடக அறிவை மேம்படுத்தி அவர்களின் தொழிலை மேலும் விரிவுபடுத்தும் வகையில் அவர்களுக்கான ஊடக நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு தேவையான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இலங்கையில் ஊடகத்துறையின் முன்னேற்றத்திற்காக ஒரு ஊடக அமைப்பு நிறுவப்பட உள்ளது.

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் முப்படைகளின் சேனாதிபதியுமான அதிமேதகு அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'தூய இலங்கை' தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரும்போக பருவத்தின் நெல் அறுவடையை கொள்முதல் செய்வதற்கான திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதுடன் நெல் கொள்முதல் செய்த பிறகு, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான 209 நெல் களஞ்சியசாலைகளில் சேமித்து வைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதுமான நெல் களஞ்சியங்கள் துப்பரவு பணிகளில் இராணுவம்

கனமழை தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவித்தல்

IMG 20250119 WA0006

கனமழை தொடர்பான வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த முன்னெச்சரிக்கை 

கிழக்கு, ஊவா மற்றும் வட-மத்திய மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, மன்னார் மற்றும் வவுனியா பிரதேசங்களுக்கானது

அவதான இருக்கவும்!


வடகிழக்கு பருவமழை காரணமாக, நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவித்தல்

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2025 ஜனவரி 19ஆம் திகதி காலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை தற்காலிகமாக சற்று அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய தினத்திற்கான வானிலை எதிர்வுகூறல்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 10 மி.மீ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 150 மி.மீ.க்கும் அதிகமான மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மி.மீ. மழை பெய்யக்கூடும். 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

மின் கட்டணம் 20% வீதத்தால் குறைக்கப்படும் - எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி

மின் கட்டணம் சுமார் 20% வீதத்தால் குறைக்கப்படும் என்றும், பொதுப் பயன்பாட்டு ஆணைக் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி அறிவித்தார்.

மின் கட்டணம் 20% வீதத்தால் குறைக்கப்படும் - எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜயக்கொடி

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும் - சுகாதார அமைச்சர்

பல்வேறு காரணிகளால் இந்நாட்டில் மக்களுக்கு சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தொடர்ச்சியாக வழங்குவது சவாலாக மாறியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும் - சுகாதார அமைச்சர்

கல்பிட்டியில் கடற்படையினரால் 2137 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினரால், 2025 ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கல்பிட்டி பராமுனை கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் டிங்கி மூலம் கொண்டு செல்லப்பட்ட, அனுமதிக்கப்பட்ட அளவை விட சிறிய அளவிலான சுமார் இரண்டாயிரத்து முப்பத்தேழு (2137) ஹேக் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

கல்பிட்டியில் கடற்படையினரால் 2137 சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]