All Stories

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக தெளிவுபடுத்துவதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் நிதி பிரதி அமைச்சர் அணில் ஜயந்த, கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, உட்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்தி நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்துத் துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது அதிகாரிகள், ஜனாதிபதியிடம் விளக்கமளித்ததுடன், வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை செயல்படுத்துவதில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார மற்றும் நிதி அமைச்சு மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள்அமைச்சின் அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும்

புதுப்பித்தல் துறையில் தொழில் நிமித்தம் ஒரே நாளில் 148 பேர் இஸ்ரேல் பயணம்

இஸ்ரேலில் கட்டுமானத் துறையின் கீழ் உள்ள Renovation, General  work, Ceramic Tiling, Plastering work ஆகியவற்றில் பணிபுரிய 148 இலங்கையர்கள் கடந்த 4 ஆம் திகதி இஸ்ரேல் சென்றுள்ளனர்.

புதுப்பித்தல் துறையில் தொழில் நிமித்தம் ஒரே நாளில் 148 பேர் இஸ்ரேல் பயணம்

சுகாதாரப் பராமரிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன், கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் முதலாவது  தொகுதி தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில்  ஆரம்பிக்கப்பட்டது.

நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பில் ஒரு சிறந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (Cluster Health Information System) (CHIS) நேற்று (05) தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதாரப் பராமரிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன், கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் முதலாவது  தொகுதி தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில்  ஆரம்பிக்கப்பட்டது.

தபால் திணைக்களத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவோம்

தபால் திணைக்களத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

 

இன்று (06) பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் நிலையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராஜமாணிக்கம் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

 

தபால் திணைக்களத்தின் வாகனங்கள் போதிய அளவு இன்மை, ஊழியர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

 

சில உப தபால் அலுவலகங்களில் அந்த அளவு இலாபம் கிடைப்பதில்லை என்றும், எனினும் உலகளாவிய ரீதியில் அமைந்துள்ளதற்கு அமைப்பாக அவ்வாறான பிரதேசங்களில் உபதபாலகங்களை நடாத்திச் செல்வது முக்கியமானது என்பதனால் அத்தா பாலகங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் விபரித்தார். 

 

அவ்வாறான தபாலகங்கள் தொடர்பாக தற்போது தபால் திணைக்களம் மீளய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

 600 மில்லியன் ரூபாய் நிதி, 12 தபாலகங்கள், 02 உப தபாலகங்கள் மற்றும் மேலும் சில தபால் நிலையங்கள் நவீனமயப்படுத்தப்படுவதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவு

படுத்தினார்.

 

தபால் திணைக்களத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவோம்

“அகற்றும் பீப்பாய்கள் குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்


உலக சுற்றாடல் தினமான (05) சிபெட்கோ நிறுவனம் அகற்றும் பீப்பாய்களை தரப்படுத்தப்பட்ட குப்பைத் தொட்டிகளாக மாற்றி நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டம் முத்துராஜவெல பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.

“அகற்றும் பீப்பாய்கள் குப்பைத் தொட்டிகளாக” மாற்றி விநியோகிக்கும் திட்டத்தை சிபெட்கோ மற்றும் Clean Sri Lanka இணைந்து ஆரம்பம்

“வாரி மகிம - அபே உறுமய” கல் ஓயா நீர்ப்பாசன புனரமைப்புத் திட்டம் ஆரம்பம்

நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்கான கல் ஓயா நீர்ப்பாசன புனரமைப்புத் திட்டமான “வாரி மகிம - அபே உறுமய”வின் ஆரம்ப விழா நேற்று (05) விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் கல் ஓயா இவுரு நைனகாடுவில் இடம்பெற்றது.

“வாரி மகிம - அபே உறுமய” கல் ஓயா நீர்ப்பாசன புனரமைப்புத் திட்டம் ஆரம்பம்

பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

2025-06-05

பாடசாலை வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் நிவாரணி க்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை

உலக சுற்றாடல் தினத்திற்காக "Clean Sri Lanka" வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம்

உலக சுற்றாடல் தினத்திற்காக "Clean Sri Lanka" வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் கொழும்பு சமுத்திர மாவத்தை கடற்கரைப் பகுதியில் மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம்

உலக சுற்றாடல் தினத்திற்காக "Clean Sri Lanka" வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில்  மரங்களை நட்டு பராமரிக்கும் திட்டம்

சுற்றாடலை மீட்டெடுத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே நமது பொறுப்பு

சுற்றாடல் அழிவின் பின்னணியில் முன்னைய அரசியல் அதிகாரமும் இருந்தது, அந்த அரசியல் கலாசாரத்தை நிறுத்திவிட்டோம், இப்போது மாறுமாறு அதிகாரிகளுக்கு கூறுகிறோம்

 "முளைப்பதற்கு இடமளிப்போம்" பூமியுடன் பிணைப்பைக் கட்டியெழுப்புவோம்

- உலக சுற்றாடல் தின நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

கொங்கிறீட் பிளாஸ்டிக்கினால் அழிந்துள்ள சூழலை மீட்டெடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும், தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதற்கு சுற்றாடலைப் பயன்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

பொதுவான தேசிய உணர்வுடன் பூமியுடன் பிணைப்பைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நமது தலைமுறைக்கு உள்ளது என்றும், இந்தப் பொறுப்பை புறக்கணிக்கக் கூடாது என்றும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் இதில் இணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கேகாலை நிதஹஸ் மாவத்தையில் இன்று (05) நடைபெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டுக்கான உலக சுற்றாடல் தினத்தின் தொனிப்பொருள் "பிளாஸ்டிக் பாவனையை ஒழிப்போம்" என்பதுடன், "முளைப்பதற்கு இடமளிப்போம்" என்ற தொனிப்பொருளின் கீழ் பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

சுற்றாடல் மறுமலர்ச்சிக்குத் தேவையான சந்தர்ப்பத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதுடன், உலக சுற்றாடல் தினத்தை ஒரு சம்பிரதாயமாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பிக்க எதிர்பார்க்கிறது.

பந்துல பெத்தியாவின் வாழ்விடமானது சரணாலயமாக அறிவிக்கப்படல், நில்கல உள்ளிட்ட புதிய வனப்பகுதிகள் குறித்த நான்கு வர்த்தமானிகளை வெளியிடல், 03 சூழல் நேய மாதிரிப் பாடசாலைகள் மற்றும் பசுமைப் புகையிரத நிலையங்களை பாராட்டல் என்பன இந்த நிகழ்வில் இடம்பெற்றன.

சுற்றாடல் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், அனைத்து அரச நிறுவனங்கள், “Clean Sri Lanka” செயலகம் மற்றும் சுற்றாடல் அமைப்புகளுடன் இணைந்து இந்த ஆண்டு சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை

இன்றைய நாள் மிக முக்கியமான நாள். நான் பல கூட்டங்களில் உரையாற்றியுள்ளேன். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளேன். ஆனால் இன்று எனக்கு ஒதுக்கப்பட்டிருப்பது வெறும் உரை மாத்திரமல்ல.

நமது தாய்நாடு மற்றும் நமது சுற்றாடல் கட்டமைப்பு பற்றிய பிணைப்பு, பொறுப்பும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நிகழ்வு வெறும் விழா மாத்திரம் அல்ல. சுற்றாடல் கட்டமைப்பு மீதான நமது பிணைப்பு, உணர்வுகள் மற்றும் பொறுப்புகளின் பிரகடனம் இது என்று நான் நம்புகிறேன். நாம் ஒரு வெளிநாட்டவரைச் சந்தித்தால், அவர்கள் அனைவரும் உங்கள் நாடு அழகாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். நமது நாட்டின் சுற்றாடல் கட்டமைப்பு குறித்து நமக்கு மிகவும் பெறுமதிமிக்க வரலாறு உள்ளது. இந்த சுற்றுச்சூழல் அமைப்பு இன்று நமது நாட்டை அழகாக மாற்றியுள்ளது.

ஆனால் நாம் காணும் இந்த அழகுக்குப் பின்னால், மிக ஆழமான ஒரு துக்கம் இருக்கிறது. நாம் பார்க்கும் இந்த அழகு உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்பில் இருக்கிறதா? அதைவிட ஆழமான சோகத்தை நாம் சந்தித்திருக்கிறோம். நாங்கள் குழந்தையாக இருந்தபோது, எங்கள் நாட்டை நிலச்சரிவு இல்லாத நாடாக அடையாளம் கண்டோம். ஆனால் எங்கள் வாழ்நாளிலேயே, நிலச்சரிவுகளின் துயரத்தை நாங்கள் அனுபவிக்கிறோம்.

நாங்கள் இளமையாக இருந்தபோது, வெள்ளம் மற்றும் பாரிய வறட்சி இல்லாத ஒரு நாடாக எங்கள் நாட்டை கண்டோம். அந்த உரிமையுடன் பிறந்த நாம், எமது வாழ்நாளில் பாரிய வெள்ளம் மற்றும் பாரிய வறட்சியின் பேரழிவை அனுபவிக்கிறோம். மேலும், மனித-யானை மோதல் ஒரு பாரிய சோகமாக மாறிவிட்டது. மிகச் சிறந்த உயிரியல் பன்முகத்தன்மை

கொண்டிருந்த நமது நாட்டின் சுற்றுச்சூழல் அமைப்புக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் இடையே ஒரு பாரிய மோதல் உருவாகியுள்ளது.

எனவே, இன்று வாழும் நமக்கு, நாம் கைவிட முடியாத ஒரு பொறுப்பும் கடமையும் உள்ளன. இந்த நாட்டில் சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க வேண்டும்.

இந்த சோகம் இப்படியே தொடர்ந்தால், நமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாரிய துயரத்தையே விட்டுச் செல்வோம். எனவே, இன்று வாழும் பிரஜைகளாக, இந்த சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுத்து, எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பது நமது கைவிட முடியாத பொறுப்பாகும். இந்தச் சுற்றாடலுக்குப் பின்னால் ஏராளமான வலுவான சட்டங்களும் விதிமுறைகளும் உள்ளன. நமது நாட்டில் மிகவும் சக்திவாய்ந்த சட்டங்களும் விதிமுறைகளும் சுற்றுச்சூழல் துறையில் உள்ளன. மேலும் அந்தச் சட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் அதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மிகவும் முறையான அரச பொறிமுறையும் உள்ளது.

முதலாவதாக, இந்த அழிவுகளுக்குப் பின்னால் அரசியல் சக்தி இருக்கிறது. நம் நாட்டில் உள்ள ஏராளமான மணல் அகழ்வு பிரதேசங்கள் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை, அல்லது ஒரு அரசியல்வாதிக்கு நெருக்கமான ஒருவருக்குச் சொந்தமானவை. இந்த நிலைமையை என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். நமது காடுகள் அழிக்கப்பட்டதற்குப் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர். இந்தக் காடுகள் அழிக்கப்படுவது, அரசியல் அதிகாரத்தால் பாதுகாக்கப்பட்டது.

உயிரைக் கொல்வதற்கு பங்கேற்க வேண்டாம். உயிரைக் கொடுக்க பங்கெடுங்கள். அதற்குத் தேவையான அரசியல் பாதுகாப்பை நாங்கள் வழங்குவோம். அரசியல் அதிகாரம் மேம்படுத்தப்பட்டிருந்தாலும், பழைய அதிகாரத்துவ பொறிமுறையின் சில பகுதிகள் பழைய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபடத் தவறிவிட்டன. போலியான கடவுச்சீட்டுகளை தயாரித்த அதிகாரிகளுக்கு எதிராக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களமும் பொருட்களை வெளியேவிட்ட அதிகாரிகளுக்கு எதிராக சுங்கத் துறையும் பல்வேறு விதிமீறல்களைச் செய்த அதிகாரிகளுக்கு எதிராக சுரங்கப் பணியகமும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அதனால்தான் பழைய பழக்கங்களை விட்டுவிட்டு புதிய பழக்கங்களைத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறுகிறோம். நான் மீண்டும் கூறுகிறேன், மாறுங்கள், இல்லையெனில் நாம் மாற்றுவோம்.

நான் அநுராதபுரத்தில் இருந்தபோது, ஆறு அடி தோண்டினாலும் நகரத்தில் நீர் இருந்தது. ஆனால் இப்போது, எவ்வளவு ஆழமாகத் தோண்டினாலும், அநுராதபுரத்தில் நீர் கிடைக்காது. எங்கள் வாழ்நாளில் அநுராதபுரத்தில் நீர் விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் வரும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை.

கடந்த காலத்தில் கடுகன்னாவை ஏறும் போது ஆறுகளின் சத்தமும், நீர்வீழ்ச்சிகளின் சத்தமும் கேட்கும். எங்கள் காதுகள் அடைக்கப்பட்டன. இப்போது அது நடக்கவில்லை, சூழல் வறண்டுவிட்டது. இந்த துயரத்தை நம் வாழ்நாளில் அனுபவிக்கும் ஒரு தலைமுறையாக நாம் மாறிவிட்டோம்.

மத்திய மலைநாட்டில் உள்ள ஏராளமான நீர்த்தேக்கங்கள் சேற்றால் நிரம்பியுள்ளன. சுற்றுச்சூழல் திட்டங்களை உருவாக்கும்போது சுற்றுச்சூழலைப் பற்றி சிந்தித்தோமா என்பதை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வரலாற்றில் நமது முன்னோர்கள் மத்திய மலைநாட்டில் நீர்த்தேக்கங்களைக் உருவாக்கவில்லை. எல்லோரும் மத்திய மலைப்பகுதியைப் பாதுகாத்து, அதிலிருந்து நீரைத் திருப்பி நீர்த்தேக்கங்களை உருவாக்கினார்கள். மினிப்பே கால்வாய் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில், மத்திய மலைப்பகுதிகளில்தான் அதிக யானைகள் இருந்தன.

இன்று, நமது சுற்றுச்சூழல் அமைப்பில் கொக்குகளையோ அல்லது வண்ணத்துப் பூச்சிகளையோ நாம் காணவில்லை. மனிதனால் ஏற்படும் பேரழிவின் விளைவுகளை நாம் காணலாம். இன்று, வண்ணத்துப் பூச்சிகள் காணப்படாத ஒரு நாட்டில் சிறு குழந்தைகள் வளர்கிறார்கள். எனவே, வண்ணத்துப் பூச்சிகள் திரும்பி வரும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது நமது பொறுப்பு.

எந்தவொரு துறையைப் பற்றியும் வெவ்வேறு எண்ணக்கருக்கள் இருக்கலாம். பொருளாதாரத் துறைக்கும் கல்வித் துறைக்கும் வேறுபட்ட எண்ணக்கருக்கள் இருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழலுடன் தொடர்புடைய ஒரே ஒரு எண்ணக்கரு மாத்திரமே இருக்க முடியும். சுற்றுச்சூழலைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பது பெரியவர்களாகிய நமது பொறுப்பு. இதைச் செயல்படுத்த மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். எனவே, நமது சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு உள்ளது.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் பாகுபாடின்றி சுற்றுச்சூழல் பிரச்சினையில் ஒன்றுபடலாம். தேசிய பிரச்சினை எதுவாக இருந்தாலும், சுற்றுச்சூழல் பிரச்சினையில் நாம் ஒன்றாக இருக்கலாம். சுற்றுச்சூழல் துறை மூலம் தேசிய ஒற்றுமையை உருவாக்க முடியும். பொதுவான தேசிய உணர்வுடன் கூடிய ஒரு தேசிய சூழலை உருவாக்க

நமக்கு வாய்ப்பு உள்ளது. அதனால்தான் “முளைப்பதற்கு இடமளியுங்கள்” என்று நாங்கள் கூறுகிறோம்.

இந்த மண்ணுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும். வறண்ட நிலத்தை, நீர் கட்டமைப்பின் அடிப்பகுதியில் உள்ள மண்ணை, கான்கிரீட் பிளாஸ்டிக்கின் பாதிப்பால்

அழித்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

உலக நாடுகளுக்கு நாங்கள் கூறுவது இதுதான். அளவில் நாம் ஒரு சிறிய தீவாக இருக்கலாம். ஆனால் இன்று நாம் மனசாட்சியின் பாரிய சக்தியாக நிற்க முடியும். ஒன்றாகச் சேர்ந்து, நம் நாட்டை மீண்டும் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்ட நாடாக மாற்ற முடியும்.

அப்போது முழு உலகமும் இலங்கையைப் பார்த்து இவ்வாறு கூறும்:

மண்ணை ஆன்மாவாக மாற்றிய ஒரு தேசம் இது. பூமியுடன் முரண்படாமல் பூமியுடன் இணைந்திருக்கும் ஒரு தேசம் இது. இன்று நாம் பூமியுடன் முரண்படுகிறோம். பூமியுடன் சமாதானமாக இருக்கும் ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவதை நமது கனவாக மாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.

சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, வேடுவத் தலைவர் உருவரிகே வன்னில எத்தோ உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுற்றாடலை மீட்டெடுத்து வருங்கால சந்ததியினருக்கு வழங்குவதே நமது பொறுப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]