தபால் திணைக்களத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால் நிலையம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராஜமாணிக்கம் முன்வைத்த வாய்மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
தபால் திணைக்களத்தின் வாகனங்கள் போதிய அளவு இன்மை, ஊழியர்களுக்கு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி அதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சில உப தபால் அலுவலகங்களில் அந்த அளவு இலாபம் கிடைப்பதில்லை என்றும், எனினும் உலகளாவிய ரீதியில் அமைந்துள்ளதற்கு அமைப்பாக அவ்வாறான பிரதேசங்களில் உபதபாலகங்களை நடாத்திச் செல்வது முக்கியமானது என்பதனால் அத்தா பாலகங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக அமைச்சர் விபரித்தார்.
அவ்வாறான தபாலகங்கள் தொடர்பாக தற்போது தபால் திணைக்களம் மீளய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
600 மில்லியன் ரூபாய் நிதி, 12 தபாலகங்கள், 02 உப தபாலகங்கள் மற்றும் மேலும் சில தபால் நிலையங்கள் நவீனமயப்படுத்தப்படுவதற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவு
படுத்தினார்.