இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SHARDS’ 2026 ஜூன் 10 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்து, செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் இன்று (2026 ஜூன் 13) தீவிலிருந்து புறப்பட்டது. இலங்கை கடற்படை, கடற்படை மரபுகளுக்கு இணங்க, கொழும்பு துறைமுகத்தில் ‘INS SHARDA’ கப்பலுக்கு கடற்படை பிரியாவிடை அளித்தனர்.
அதன்படி, ‘INS SHARDA’வின் கட்டளை அதிகாரி, மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி மற்றும் கடற்படைக் கட்டளையின் கொடி அதிகாரி ஆகியோருக்கு இடையே அதிகாரப்பூர்வ சந்திப்புகள் நடைபெற்றன. இச்சந்திப்பின் போது, இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையே தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
‘INS SHARDA’ கப்பல் தீவில் தங்கியிருந்தபோது, கப்பல் குழுவினருக்கும் இலங்கை கடற்படை வீரர்களுக்கும் இடையே ஒரு நட்பு ரீதியான கைப்பந்து போட்டி நடைபெற்றது. மேலும், இரு நாடுகளின் கடற்படையினரும் ஒரு யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதுமட்டுமின்றி, கப்பல் குழுவினர் தீவில் உள்ள கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களையும் பார்வையிட்டனர்.


