All Stories

யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் பார்வையிட்டார்

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விரைவில் அமையவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தை கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் நேற்று (27.05.2025) மாலை 05.00 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சகிதம் பார்வையிட்டார்.

யாழ்.மாவட்ட கடவுச்சீட்டு அலுவலகத்தை கெளரவ கடற்றொழி்ல் அமைச்சர் பார்வையிட்டார்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27.05. 2025) காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைகள் மற்றும் தீர்க்கப்படவேண்டிய பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதல் தொடர்பான கலந்துரையாடல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தின் இணைந்த கிளீன் ஸ்ரீலங்கா செயலகம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் கடலோரப் பகுதியான நிலாவெளி புறாமலை தீவு மற்றும் திருகோணமலை கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (27) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரைக்கு அருகிலுள்ள கடற்பரப்பை சுத்தம் செய்வதல் தொடர்பான கலந்துரையாடல்

மகாவலி ஆற்றின் கரை அரிப்பைத் தடுப்பதற்காக மூங்கில் நடும் திட்டம்.



மகாவலி ஆற்றின் கரையரிப்பைத் தடுப்பதற்காக மூங்கில் நடும் திட்டமானது நேற்றைய முன்தினம் பேராதனை பல்கலைக்கழகத்தின் Zero Plastic ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவது முறையாகவும் மேற்கொள்ளப்படும் இந்த மூங்கில் நடுகைத் திட்டமானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் வன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் பிரதி பனிப்பாளர் நில்மினி ஏகநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

நடப்பட்ட மூங்கில்
மரங்களுக்கான அனுசரணையை இலங்கை வங்கியின் பேராதனை கிளை வழங்கியது.

மகாவலி ஆற்றின் கரை அரிப்பைத் தடுப்பதற்காக மூங்கில் நடும் திட்டம்.

" சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு "

திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது (17) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில நடைபெற்றது.

" சிறந்த சமுதாயத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு "

தென் மாகாண வருடாந்த புதிய தேயிலை விழா

தென் மாகாண 'புதிய தேயிலை விழா'' கொடபொல வரலாற்றுமிக்க கெட்டம்பருவ ரஜமகா விஹாரையில் மகாசங்கரத்தினரின் அறிவுறுத்தல்களுக்கமைய இடம்பெற்றது.

தென் மாகாண வருடாந்த புதிய தேயிலை விழா

வெசாக் பௌர்ணமி போயா தினத்தை அனுசரிப்பதற்காக நேற்று வவுனியாவில் உள்ள விகாரைகளுக்கு ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்.

இந்த ஆண்டு வெசாக் பௌர்ணமி போயாவை அனுசரிக்க, வவுனியாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மடுகந்த ஸ்ரீ தலதா விஹாரையில் ஏராளமான பக்தர்கள் கூடினர். இது புனித சின்னம் இந்த நாட்டிற்கு வருகை தரும் தங்கும் இடங்களில் ஒன்றாகும்.

வெசாக் பௌர்ணமி போயா தினத்தை அனுசரிப்பதற்காக நேற்று வவுனியாவில் உள்ள விகாரைகளுக்கு ஏராளமான மக்கள் வருகை தந்திருந்தனர்.

சிறப்புடன் நடைபெற்ற யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட வெசாக் தின நிகழ்வு மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (12.05.2025) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்புடன் நடைபெற்ற யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவுற்று 60.69 வீதமான வாக்கு பதிவு

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை, ஏறாவூர், காத்தாங்குடி நகர சபை, ஏறாவூர் பற்று, கோறளை பற்று , கோறளை பற்று மேற்கு, கோறளை பற்று வடக்கு, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை பற்று, மண்முனை மேற்கு, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவு பற்று ஆகிய 9 பிரதேச சபைகளுக்கான 274 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு அமைதியான முறையில் இடம் பெற்று பிற்பகல் 04.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது .

மாவட்டத்தில் 477 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற்று 144 வாக்கெண்ணும் நிலையங்களில் பி.ப 04.30 மணிக்கு வாக்கெண்ணல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 455,520 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் மாலை 04.00 மணிக்கு வாக்களிப்பு நிறைவுற்று 60.69 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று மாத்திரம் 139 தேர்தல் விதி மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கல்குடா தொகுதியில் 1 தேர்தல் வன்முறை சம்பவமும் பதிவாகியுள்ளதாக  அவர் தெரிவித்துள்ளார்.
 
இன்று (06) திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பிரதான மத்திய நிலையமாகிய மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
 
 
மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிறைவுற்று 60.69  வீதமான வாக்கு பதிவு

திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகம்

திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான 321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (05) காலை 8 மணியளவில் திருகோணமலையில் அமைந்துள்ள விபுலானந்தா கல்லூரியில் ஆரம்பமானது.

திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்குப்பெட்டிகள் விநியோகம்

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு. 

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள் மற்றும் ஆவணங்கள் விநியோகித்தல் மற்றும் பாரமெடுத்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு. 

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான செயலமர்வு. 

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்  

 
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு 50 வருடங்கள் பூர்த்தி அடைவதை முன்னிட்டு நாடு முழுவதும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை  நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண பிரதிப் பொது முகாமையாளர் விகும் பெர்னாண்டோ குறிப்பிட்டார். 
நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு 50 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்  
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]