All Stories

கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசன குளமான இரணைமடுவிற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் விஜயம்.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதந்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நீர்ப்பாசன குளமான இரணைமடுவிற்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் விஜயம்.

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில்..

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில் கிளிநொச்சியிலுள்ள நெலும்பியச மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி நிதியத்தினால் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற வடமாகாண மாணவர்களை பாராட்டும் நிகழ்வு பிரதமர் தலைமையில்..

மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

இன்று (18) காலை 10.20 மணிக்கு, விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் - தலா 70 செ.மீ அளவும், ரந்தெனிகல நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2.5 மீ மற்றும் 1 மீ ஆகவும், மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் - தலா 2 மீ மற்றும் 2.5 மீ வரைம் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாயம் இருப்பதாகவும், எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனம்பிடிய மற்றும் சோமாவதிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பயனடைந்த Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, Clean Sri Lanka செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் முல்லைத்தீவு என்பன “க்ளீன் ஸ்ரீ லங்கா – ஒருங்கிணைந்த மற்றும் நிலைத்த நாடு” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக நடமாடும் சேவை மற்றும் விசேட மக்கள் நலன்புரி வேலைத்திட்டம் அண்மையில் (2025 டிசம்பர் 12) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ திலகநாதன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்டார்.

ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பயனடைந்த Clean Sri Lanka மாபெரும் நடமாடும் சேவை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி மகஜர் கையளிப்பு

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி கடந்த 12 ஆம் திகதி யாழ்ப்பாண மீனவர்கள் ஒன்றிணைந்து பண்ணை பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அலுவலகத்தின் முன்னால் இருந்து பேரணியாக ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்றடைந்துடன், அதிமேதகு சனாதிபதி அவர்களுக்கான மகஜர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தக் கோரி மகஜர் கையளிப்பு

தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து சிறு தொழில் முயற்சியாளர் நிதி உதவி

அண்மையில் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து -  கருவாடு உற்பத்தி செய்யும் பெண் சிறு தொழில் முயற்சியாளரான திருமதி கமலினி அண்ணாத்துரை அவர்கள் நேற்று (02.12.2025)  அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யவதற்காக. அரசாங்கத்தால்  அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு ரூபா 50,000.00 நிதியினை வைப்பிலிட்டு, அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளித்தார்.

தென்பகுதி மக்களுக்கு யாழிலிருந்து சிறு தொழில் முயற்சியாளர் நிதி உதவி

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் வீடமைப்பு நிர்மாண மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ அவர்கள் தலைமையில் நேற்று (20.11.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் வைத்தியர் எச். எம். சுசில் ரணசிங்ஹ தலைமையில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்