இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு நேற்று (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.

இந்துக்களின் முக்கிய சமயச் சடங்குகளில் ஒன்றான தைப்பூச நிகழ்வு நேற்று (11) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய தூதுவர் அகிஜோ இசோமட்டா (Akio Isomata) மற்றும் தூதரக அதிகாரிகள், கிளிநொச்சி பளை மற்றும் முகமாலை பகுதிக்குச்சென்று கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணிவெடி அகற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினர்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர நேற்று (10) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்திற்கு ஆய்வு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது, கல்வி அமைச்சு மற்றும் கல்வித் திணைக்களத்தில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் புதிய பிரதம செயலாளர் டி.ஏ.சி.என். தலங்கமவை, மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடனான கலந்துரையாடல் (07) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் 06.02.2025 ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டத்தில் வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது நிகழ்ச்சியின் போது பயன்படுத்தும் ஒலிபெருக்கிகளால் பொதுமக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கவனத்திற்கு முன்வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின், குருக்கள்மடம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஏத்தாளைக்குளத்தில் கடந்த வருடத்தை போல் இம்முறையும் பல்வகைப்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் வந்திருப்பதை காண முடிகின்றது.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வடக்கு மாகாணத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்களில் அரிசி வகைகள் விற்பனை செய்யப்படும் விலைகளை, மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலர் பொ.வாகீசன் அறிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நேற்று (04) மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றன.
"பல்சமய மக்களின் ஒன்றிணைந்த சுதந்திர தின கொண்டாட்டம் - அழகான தேசம், அன்பான மக்கள்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் சுதந்திர தின நிகழ்வு மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மூவின மக்ககளின் பங்களிப்புடன் மிகச்சிறப்பாக இடம் பெற்றதுடன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி மற்றும் மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதி ஆகியவற்றின் ஊடாக இரண்டு வாகனப் பேரணிகள் காந்தி பூங்காவை வந்தடைந்ததும் பிரதான அரங்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்றது.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்று (04.02.2024) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது.
தூய்மையான இலங்கை தேசிய திட்டத்தை வலுப்படுத்துவதற்கு ஏதுவாகவும் பசுமை உற்பத்தித்திறன் (Green Productivity ) எண்ணக்கருவிற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கழிவு முகாமைத்துவத் திட்டம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போகத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கை அழிவு தொடர்பில் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதக் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]