சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (16) அரச எண்ணெய் தேய்க்கும் பெருவிழாவில் கலந்துகொண்ட போதே மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
இதன் போது சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயந்தி சார் தற்போதைய அரசியல் நிலைப்பாடு, சுகாதாரத் துறையின் தற்போதைய செயற்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக மகாநாயக்கர்களுக்கு தெளிவு படுத்தினார்.
16 வருடங்களுக்கு பின்னர் பொதுமக்களுக்காக நடைபெறும் விசேட தலதா யாத்திரைக்கான முன் ஆயத்த செயற்பாடுகள், மற்றும் வெசாக், பொசொன், எசல கொண்டாட்டங்கள் காண நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர் மகாநாயக்கர்களுடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.
இதேவேளை அரசாங்கம் திட்டமிட்ட பாரிய வேலைத் திட்டங்கள் மேற்பட்டு வருகின்றமை தெரிவதாக மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்கள் தெரிவித்தனர்.