கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது

கொழும்பு மத்திய பேருந்து நிலையம் ‘சுத்தமான இலங்கை’ திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படவுள்ளது
  • :

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) உடன் நேற்று (ஜூன் 16) கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயம் இம் முக்கிய பொதுப் போக்குவரத்து மையத்தில் மேட்கொள்ளப்படவிருக்கும் புதுப்பித்தல் திட்டத்தை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

நாடு முழுவதும் உள்ள முக்கிய பொது இடங்களில் தூய்மை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் அதே வேளையில் உள்கட்டமைபு வசதிகளை மேம்படுத்தும் 'சுத்தமான இலங்கை’ முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் புதுப்பித்தல் திட்டம் அமைந்துள்ளது. திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் மிகவும் பரபரப்பான போக்குவரத்துப் மையங்களில் ஒன்றான மத்திய பேருந்து நிலையம், பயணிகள் வசதி மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் விரிவான மறுசீரமைப்புக்கு உட்பட உள்ளது. பயனர் நட்பு மற்றும் சுற்றுச்சூழல் தரநிலைகளில் அதிக கவனம் செலுத்தி, மேட்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டம் நகரத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு பெரிதும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான இந்த கூட்டு முயற்சி, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ஒரு பயன்மிக்க மூலோபாய அணுகுமுறையை பிரதிபலிப்பதுடன் தொலைநோக்கு, ஒழுக்கம் மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் ஒருங்கிணைக்கிறது.

இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபை இயக்குநர் ஜீவக பிரசன்ன புரசிங்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]