இராணுவ புலனாய்வுப் படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

இராணுவ புலனாய்வுப் படையினரும், விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
  • :

இராணுவ புலனாய்வுப் படையினரும், நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து 2025 ஜூன் 15 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வல்வெட்டித்துறை பொலிகண்டி கடற்கரையில் சுமார் ரூ.400 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

புலனாய்வுப் படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் போது கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 98 பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிட்டத்தட்ட 200 கிலோகிராம் கேரள கஞ்சாவும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகும் கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்புப் படையினர் விரைவாகச் செயல்பட்டு, அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, தப்பிச் செல்வது அல்லது மேலும் விநியோகம் செய்யப்படுவதைத் தடுத்தனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் படகு மேலதிக விசாரணைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]