திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" உத்தியோக பூர்வமாக திறந்து வைப்பு
  • :

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் "உள்ளக அலுவல்கள் பிரிவு" நேற்று (16) உத்தியோக பூர்வமாக மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கா அவர்களின் எண்ணக்கருவிற்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழலினை முற்றாக ஒழிக்கும் செயற்திட்டமான இலங்கையின் ஊழலை ஒழிக்கும் செயற்பாடு திட்டத்தினை மாவட்ட மட்டத்தில் செயற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டமாக பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு இப்பிரிவானது திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]