All Stories

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை

இன்று காலை (02) கிழக்கு இந்தோனேசியாவைத் தாக்கிய நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை என்று அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இலங்கையைப் பாதிக்கவில்லை

ஸொஹ்ரான் மம்தானி நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக இளம் மேயராகத் தெரிவு

 நியூயார்க்கின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்று, நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மற்றும் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கும் அதன் வயது குறைந்த இளம் மேயராக ஸொஹ்ரான் மம்தானி வரலாறு படைத்துள்ளார்.

ஸொஹ்ரான் மம்தானி நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மற்றும் ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமாக இளம் மேயராகத் தெரிவு

ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

 
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் (Anthony Albanese) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி (24) பிற்பகல் நடைபெற்றன.
ஜனாதிபதிக்கும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்கள்.

ஈரான்-இஸ்ரேல் மோதலுக்கு மத்தியில் ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஈரானில் பூமி அதிர்ச்சி

நேற்று (20) வெள்ளிக்கிழமை மாலை ஈரான் நாட்டின் வட மத்திய மாகாணத்தின் செம்னான் நகரத்தில் 5.5 றிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  

 

செம்னான் நகரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் (22.4 மைல் ) மற்றும் சோர்கெஹ் பகுதியில் இருந்து 17 கிலோமீட்டர் (10.6 மைல்) தொலைவில் உள்ள பிரதேசத்திலேயே இந்த பூமி எழுச்சி தாக்கியுள்ளதாக ஈரானிய செய்தி சேவை தெரிவித்துள்ளது.

 

இப்பூமியர்வினால் வடமேல் ஈரானில் 5 பேர் இறந்துள்ளதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய உத்தியாகப் பூர்வ தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

 

அதிகமாக உள்ள பிராந்தியத்தில் ஈரான் அமைந்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக பல பூமி அதிர்வுகள் ஈரானில் ஏற்பட்டுள்ளன.

 

நாட்டின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் பேரழிவு தரும் நிலநடுக்கம் 2013 ஆம் ஆண்டு ஏற்பட்டது, அப்போது தென்கிழக்கு கெர்மன் மாகாணத்தில் அமைந்துள்ள பாம் நகரில் குறைந்தது 34,000 பேர் இறந்தனர். அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக இருந்தது.

ஈரானில் பூமி அதிர்ச்சி

பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் PNS அஸ்லட் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றை மேட்கொண்டு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் (PNS) அஸ்லட் புதன்கிழமை (மார்ச் 5) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கடற்படை மரபுகளுக்கு இணங்க, இலங்கை கடற்படை வருகை தந்த கப்பலுக்கு வரவேற்பு அளித்ததாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாக்கிஸ்தான் கடற்படை கப்பல் PNS அஸ்லட் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை