நேற்று (ஜூன் 16) கொழும்பு Colombo City Centre, Courtyard by Marriott இல் நடைபெற்ற தேசிய அனர்த்த மீள்திறன் திட்டம் (NDMP) 2023–2030 தொடர்பில் ஒரு கருத்தரங்கு நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) ஏற்பாடு செய்த இந்தப் கருத்தரங்கில் அரச, அரச சாரா நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த முக்கிய அங்கத்தவர்கள் இதில் கலந்துக்கொண்டனர்.
இங்கு உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), NDMP இன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இது "மாறிவரும் நிச்சயமற்ற உலகில் உயிவாழ்விற்கும் செழிப்புக்கும் ஒரு வரைபடம்" என்றார். "அனர்த்தங்கள் நமது வளர்ச்சியை தடம் புரள அனுமதிக்க நாம் தேர்வு செய்யலாம், அல்லது சவால்களை வாய்ப்புகளாக மாற்றும் மீள்திறன் மிக்க சமூகங்களை உருவாக்க நாம் தேர்வு செய்யலாம்" என்று அவர் மேலும் நினைவுபடுத்தினார்.
இந்நிகழ்வு, DMC யின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொடவின் (ஓய்வு) தொடக்க உரையுடன் ஆரம்பித்தது. அதனைத்தொடர்ந்து உலக உணவுத் திட்டத்தின் (WFO) இலங்கைக்கான இயக்குநர் திருமதி அனிதா ஹிர்ஷ், உலகளாவிய அனர்த்த அபாய போக்குகளை தொடர்பில் எடுத்துரைத்து உரையாற்றினார்.
இந்நிகழ்வில் NDMP இன் செயல்பாட்டு கட்டமைப்பு மற்றும் செயல்படுத்தல் உத்திகள் பற்றிய விரிவான விளக்கக்காட்சிகள் உட்பட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்புகள் பற்றிய விளக்கவுரைகளும் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக குழு விவாதங்கள் மற்றும் செயற்திட்ட அமர்வுகளின் போது, பங்கேற்பாளர்கள் மிக்க ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு கருத்துக் பரிமாற்றலில் ஈடுபட்டனர்.
DMC யின் இயக்குனர் (தயார்நிலை) சதுர லியனாராச்சிகே மற்றும் மற்றும் உதவி இயக்குநர் (தயார்நிலை) திருமதி உத்யா அபேசிங்க ஆகியோரின் உரைகளையடுத்து இக்கருத்தரங்கு நிறைவடைந்தது.
இலங்கை கடற்படைத் தளபதி, இராஜதந்தி ரிகல், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம், அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் இந்தப் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.