போதைப்பொருள் வியாபாரம் பாதாள உலக செயற்பாடுகளால் சொத்துக்களை சேகரித்த நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை - பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு
போதைப்பொருள் வியாபாரம் பாதாள உலக செயற்பாடுகள் உட்பட சட்டவிரோத செயற்பாடுகளினால் சொத்துக்களை சேகரித்த 88 நபர்களின் சொத்துக்களை பறை முதல் செய்வதற்கு சட்டவிரோத சொத்து விசாரணை பிரிவினால் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற ஆளுவர்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டின் பிரபலமானவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குற்றங்கள் தொடர்பான நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் முடக்கப்பட்ட சொத்துக்களில் பலரின் சொத்துக்களும் அடங்கும்.
அவ்வாறே தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்கள் நானூற்று எட்டுக் கோடி அறுபத்து மூன்று இலட்சம் முப்பத்து இரண்டாயிரத்து இருநூற்று இருபத்து நான்கு ரூபாய் இருபத்து இரண்டு சதம் மொத்த பெறுமதியாக உறுதிப்படுத்தப்பட்டதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.