All Stories

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்

மட்டக்களப்பில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மியன்மார் அரசினால் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.

மியன்மார் அரசினால் மட்டக்களப்பு மக்களுக்கு நிவாரணம்

மட்டக்களப்பில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பில் சுகாதார மற்றும் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி. ஆர்.எச்.எம்.பி. அபேகோன் பங்கு பற்றுதலுடன் புதிய மாட்ட செயலகத்தில் நேற்று (20) இடம் பெற்றது.

மட்டக்களப்பில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (06) கண்டாவளை பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில், பிரதேச செயலாளர் திரு. த. பிருந்தாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவுகள்

சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 : முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முதன்முறையாக விருதை பெற்றது

இலங்கை பொது நிதி கணக்காளர்கள் சங்கம் (Association of Public Finance Accountants of Sri Lanka - APFASL) மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் பொது துறை பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 வழங்கும் விழா, நேற்று 2026 பெப்ரவரி 5ஆம் திகதி BMICH – சிறிமாவோ பண்டாரநாயக்கா கண்காட்சி மண்டபத்தில் நடைபெற்றது.

சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் விருதுகள் – 2025 : முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முதன்முறையாக விருதை பெற்றது

15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவில் முள்ளிப்பொத்தானையில் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் புதிதாக நிருமாணிக்கப்பட்ட வீடொன்று உரிய பயனாளியிடத்தில் நேற்று (05) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு பயனாளிக்கு கையளிப்பு

சித்தாண்டியில் களத்தில் இறங்கிய பொது சுகாதார பிரிவினர் - டெங்கு சிவப்பு எச்சரிக்கை

மட்டக்களப்பு செங்கலடி பொது சுகாதார நிலைய எல்லைக்கு உட்பட்ட சித்தாண்டி கிராமத்தில் டெங்கு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சித்தாண்டியில் களத்தில் இறங்கிய பொது சுகாதார பிரிவினர் - டெங்கு சிவப்பு எச்சரிக்கை

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் நிகழ்வுகள்....

இலங்கை திரு நாட்டின் 78 வது சுதந்திர தின நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (04)  இடம்பெற்றது.

 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்  தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்ஷினி ஸ்ரீகாந்த், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக தலைவர் மனோகரன் உள்ளிட்ட கழக பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர். தாய்த்திரு நாட்டின் தேசிய கொடி அரசாங்க அதிபரினால் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டதனைது.

 

அத்துடன், நாட்டிற்காக உயிர் நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமத தலைவர்களின் ஆசியுரைகள், மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையுரை என்பன நிகழ்த்தப்பட்டன.

 

மேலும், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் அணி நடை, பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய பவணி மற்றும் சாரணர் மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் மரியாதை அணிவகுப்பு நடை ஆகியன நடைபெற்றன.

 

இதன்போது, குறித்த நிகழ்வில் மாணவர்களுக்கான  பாராட்டு சான்றிதழ்களும், அரச உத்தியோகத்தர்களுக்கு அதிதிகளினால் பயன் தரும் மரக் கன்றுகளும் வழங்கப்பட்ட ன. அத்துடன் மாவட்ட செயலக வளாகத்தில் அதிதிகளினால் தென்னை மரக் கன்றுகள் 78ஆவது சுதந்திர தின நினைவாக மரக் கன்றுகளும் நடப்பட்டன.

78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் நிகழ்வுகள்....