நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று (25) மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று (25) மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் மாவட்டத்தில், மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி அருமைநாதன் நிமால் தெரிவித்தார்
நேற்று முன்தினம் (20) கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 19ஆம் திகதி மலேரியா தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 12ம் திகதி ஆபரிக்க நாடான கானாவிலிருந்து இங்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வந்த வேளையிலே இவர் மலேரியா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆனால் எம்மை சுற்றியுள்ள நாடுகளினால் எமக்கு ஆபத்துள்ளது.
மாலைதீவு தவிர்ந்த தூர கிழக்கு மற்றும் ஆபிரிக்,தென்னாசிய நாடுகளில் இன்னும் உள்ளது.எனவே இலங்கையிலிருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அனுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
அனுராதபுரம், பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையான, யானை மனித மோதலுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பலாகல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு விசேட ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகேயின் ஆலோசனைக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்ற தமிழ் சிங்கள பாடநெறிகளில் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர்களது இன நல்லுறவுக்கான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் மட்/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் அரசரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்களான எம்.எம்.செய்னுதீன் மற்றும் பி.எம்.பிரியதர்ஷினி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
உலக உணவுத்திட்டத்தின் அனுசரணையில் வழங்கப்படும் இலவச MOP உர விநியோகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் (18) மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.ஆர் பரணீகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தின் தேசிய ரீதியான 56 வது நிலையமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது நிலையம் இன்று (16) ஓட்டமாவடி பொது நூலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தின் “தேசிய சிறுநீரக நோய் தடுப்பு” திட்டத்தின் கீழ், திரப்பனை மகாகணுமுல்ல கிராம சேவக பிரிவில் புதிய நீர் சுத்திகரிப்பு அமைப்பு கடந்த 12ஆம் திகதி பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டது.
அண்மைய வெள்ளத்தினால் சேதமடைந்த பொலன்னறுவை மாவட்ட விவசாயிகளின் விளைநிலங்களுக்கு இழப்பீடாக 139 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கான மதிப்பீட்டுப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக விவசாயிகள் காப்புறுதிச் சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை மாவட்ட செயலக அலுவலகக் கட்டடத் தொகுதியின் கூரையின் மீது பொருத்தப்பட்ட 96 கிலோ வோட் கொள்ளளவு கொண்ட சூரிய சக்தி மின் கட்டமைப்பு அண்மையில் (11) திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று (13.12.2024) காலை 08.45 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக உத்தியோகபூர்வமாகத் தமது கடமையினைப் பொறுப்பேற்றார்.
பிரித்தானியத் தூதரகத்தின் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் மனித உரிமைக்கான முதன்மைச் செயலாளர் திரு. ஹென்றி டொனாடி அவர்கள், இன்றைய தினம் (11.12.2024) காலை 08.45 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]