All Stories

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்ச்சிகள்

கேகாலை மாவட்டத்தில் 78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து நடத்தப்படவுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்த கலந்துரையாடல் மாவட்ட செயலாளர் ஜகத் ஹேரத் தலைமையில் இன்று (22) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான மாவட்ட மட்ட நிகழ்ச்சிகள்

உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அரசாங்க அதிபருக்கு அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தல்

யாழ்ப்பாண மாவட்டத்தில்  சிறப்பான  உள்ளக விளையாட்டு அரங்கு  ஒன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், அது தற்போது நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டுத்தப்பட்டுள்ளது என தெரித்த அதிமேதகு சனாதிபதி அவர்கள், மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து,  இத் திட்டங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதாக - சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நேற்று(16.01.2026) வீட்டுத் திட்ட மானியத்திற்கான காசோலைகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வில் அதிமேதகு சனாதிபதி தெரிவித்தார்.

உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்தின் வேலைத் திட்டங்களை விரைவுபடுத்துமாறு அரசாங்க அதிபருக்கு அதிமேதகு சனாதிபதி அறிவுறுத்தல்

தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள வேவெஸ்ஸ பாதுகாப்பு நிலையத்தில் தைப்பொங்கல் விழா பதுளை வ

தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள வேவெஸ்ஸ பாதுகாப்பு நிலையத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டம் பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தலைமையில் இடம்பெற்றது.

தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள வேவெஸ்ஸ பாதுகாப்பு நிலையத்தில் தைப்பொங்கல் விழா பதுளை வ

வடக்கு மாகாணத்தில் சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாணத்திலுள்ள சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (02.01.2026) நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இச்சந்திப்பின்போது, சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் தற்போதைய பொருளாதாரச் சூழலில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துத் தீவிரமாகக் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக, எமது மாகாணத்தினுள் மாவட்டங்களுக்கு இடையில் கூட்டுறவுச் சங்கங்களின் வட்டி வீதங்களில் காணப்படும் வேறுபாடுகள் குறித்தும், அம்முரண்பாடுகளைக் களைவது தொடர்பிலும் ஆழமாக ஆராயப்பட்டது. அங்கத்தவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் சீரான வட்டி வீத முறைமையைப் பேணுவதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, கிராமப்புறப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் நுண்நிதி நிறுவனங்களின் கடன் பொறியில் இருந்தும், அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகளிலிருந்தும் பொதுமக்களைப் பாதுகாப்பதில் கூட்டுறவுச் சங்கங்களின் பங்கு இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

எதிர்காலத்தில் எமது மக்கள் இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகாத வகையில், கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக இலகுவான மற்றும் நியாயமான வட்டி வீதத்தில் கடன்களை வழங்குவதற்கான பொறிமுறைகளை உருவாக்குவது குறித்தும், சங்கங்களின் எதிர்காலச் செயற்பாடுகளை எவ்வாறு மக்கள் நலன் சார்ந்து முன்னெடுப்பது என்பது குறித்தும் இதன்போது ஆக்கபூர்வமான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்,உதவித்திட்டமிடல் பணிப்பாளர்,வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களினதும் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர், சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சமாசங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஊடகப் பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி.

  1. 01.2026
வடக்கு மாகாணத்தில் சிக்கனக் கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்துவது தொடர்பிலும், நுண்நிதிக் கடன் தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல்

நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி

திட்வா சூறாவளியால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெறும்.

நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி

தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல் 

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் 31.12.2025 ந் திகதி கலந்துரையாடலில் ஈடுபட்டதற்கு அமைவாக, திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை கட்டம் கட்டமாக விடுவிப்பது தொடர்பாக - விகாராதிபதியுடன் அரசாங்க அதிபர் சந்தித்து தொடர் நடவடிக்கை எடுப்பது என கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.  

தையிட்டி திஸ்ஸ விகாராதிபதி அவர்களுடன் அரசாங்க அதிபர் கலந்துரையாடல்