திட்வா சூறாவளியால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி ஜனவரி 10 முதல் 14 வரை நடைபெறும்.
டிட்வா பேரழிவால் சேதமடைந்த நுவரெலியா மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நீர்ப்பாசன முறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சிரமதானப் பணி ஜனவரி 10 முதல் 14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீரஆராச்சி தெரிவித்தார்.
அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் சுமார் 3000 சகோதர சகோதரிகளின் பங்கேற்புடன் இந்த மாபெரும் சிரமதானப் பணி செயல்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


