புதிய அரசாங்கம் ஒன்றின் கீழ் புதியதொரு ஆண்டின் வருகையுடன் முன்னைய வருடங்களை விட 2025 நன்மை அளிக்கக் கூடியதாக அமையும் என அஸ்கிரி பீடத்தின் மகா நாயக்க வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்ததாக கண்டி மாவட்ட ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
All Stories
விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பெருமளவான விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக சோதனைச் சாவடிகளை அமைக்கும் நடவடிக்கை அனுராதபுரம் மகவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டது.
சுனாமி பேரலையினால் உயிர்நீத்த மக்களை நினைவு கூறும் முகமாக இன்று (26) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமாக டிசம்பர் 03 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டதை அடுத்து தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் மாற்றுத் திறனாளிகள் தினம் (24) இடம்பெற்றது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நேற்று (25) மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் மாவட்டத்தில், மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி அருமைநாதன் நிமால் தெரிவித்தார்
நேற்று முன்தினம் (20) கிளிநொச்சியில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 19ஆம் திகதி மலேரியா தொற்றுடன் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.
இந்த மாதம் 12ம் திகதி ஆபரிக்க நாடான கானாவிலிருந்து இங்கு வந்து காய்ச்சலுக்கு சிகிச்சைக்கு வந்த வேளையிலே இவர் மலேரியா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்போது இலங்கை மலேரியா அற்ற நாடாக உலக சுகாதார தாபனத்தினால் கூறப்பட்டுள்ளது. ஆனால் எம்மை சுற்றியுள்ள நாடுகளினால் எமக்கு ஆபத்துள்ளது.
மாலைதீவு தவிர்ந்த தூர கிழக்கு மற்றும் ஆபிரிக்,தென்னாசிய நாடுகளில் இன்னும் உள்ளது.எனவே இலங்கையிலிருந்து குறித்த நாடுகளுக்கு பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே மக்கள் இவ்வாறான நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அனுகி குறித்த நாடுகளுக்கு சென்று வந்த விடயத்தையும் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
அனுராதபுரம், பலாகல பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையான, யானை மனித மோதலுக்கு நிரந்தர தீர்வை வழங்கும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று டிசம்பர் 16 ஆம் திகதி பலாகல பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு விசேட ஒருங்கிணைந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகேயின் ஆலோசனைக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்ற தமிழ் சிங்கள பாடநெறிகளில் கலந்து கொள்ளும் உத்தியோகத்தர்களது இன நல்லுறவுக்கான சந்திப்பு ஒன்று கடந்த வாரம் மட்/மம/காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் அரசரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியர்களான எம்.எம்.செய்னுதீன் மற்றும் பி.எம்.பிரியதர்ஷினி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
உலக உணவுத்திட்டத்தின் அனுசரணையில் வழங்கப்படும் இலவச MOP உர விநியோகம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினம் (18) மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் திரு.ஆர் பரணீகரன் அவர்களின் நெறிப்படுத்தலில் ஆரம்பமாகியுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (17) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தின் தேசிய ரீதியான 56 வது நிலையமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது நிலையம் இன்று (16) ஓட்டமாவடி பொது நூலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.