கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட அக்கராயன் பகுதியில் கரும்பு உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொண்டு, உள்ளூர் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய மூலப்பொருள் கரும்பை நிலையான முறையில் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்ட கலந்துரையாடல், நச்சுரல் ரூட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சு. முரளிதரன் அவர்களின் தலைமையில் 12.03.2026 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


