மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்

மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதிப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்
  • :

மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக, மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி நேற்று (19) மாலை 5.00 மணிக்குப் பிறகு கல்லேல்லயிலிருந்து மன்னம்பிட்டி வரையிலான பகுதியில் அனைத்து வாகனங்களுக்கும் முழுமையாக மூடப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எனவே, வெலிகந்த - திம்புலாகலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ரயில் சேவை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என பொலன்னறுவை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

வீதியின் நிலையை இன்று காலை பரிசீலனை செய்த பின்னர், மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]