ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான நிகழ்வு

ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும்  மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான  நிகழ்வு
  • :

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று முன் தினம் (03) இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டை வளாக மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில், கிழக்கு மாகாணத்தில் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய ஏற்றுமதியாளர்களையும் தொழில்முனைவோரையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள நிலையில் அதிகார சபையின் உத்தியோகத்தர்களுக்கு இதன் போது தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் டெக்னோ பார்க்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் மாலை 4,00 மணிவரை விழிப்புணர்வு கருத்தரங்கு, சாதனையாளர்கள் அனுபவ பகிர்வு, மினி கண்காட்சி மற்றும் வணிக உற்பத்தி தொடர்பான தெளிவூட்டல்களும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்திலிருந்து ஏற்றுமதி திறன் கொண்ட தொழில்முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்களை வலுப்படுத்தும் நோக்கத்திற்காக இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந் நிகழ்வில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் சமீம், மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் ஜி பிரணவன், மத்திய மாகண பிரதி பணிப்பாளர் ஜெயலத், மாவட்ட எற்றுமதி அபிவிருத்தி உத்தியோகத்தர் அருந்தவநீதன் ஸ்வர்னா என பலர் கலந்து கொண்டனர்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]