விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனப் பணியாளர்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 92 புதிய நியமனதாரர்களுக்கு நியமனக் கடிதங்கள்
விமானப் போக்குவரத்துத் துறையை மேலும் பலப்படுத்தும் வகையில், விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தில் (AASL) நிலவிய வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 92 புதிய ஊழியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, கட்டுநாயக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.


