மகாவலி ஆற்றின் கரையரிப்பைத் தடுப்பதற்காக மூங்கில் நடும் திட்டமானது நேற்றைய முன்தினம் பேராதனை பல்கலைக்கழகத்தின் Zero Plastic ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது முறையாகவும் மேற்கொள்ளப்படும் இந்த மூங்கில் நடுகைத் திட்டமானது பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் வன மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் பிரதி பனிப்பாளர் நில்மினி ஏகநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நடப்பட்ட மூங்கில்
மரங்களுக்கான அனுசரணையை இலங்கை வங்கியின் பேராதனை கிளை வழங்கியது.
