யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நீதி அமைச்சர் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
யாழ்ப்பாண மாவட்டத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுடனான கலந்துரையாடல் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
ஹர்ஷன நானாயக்கார அவர்களின் தலைமையிலும், ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின்
பங்குபற்றுதலுடனும் அண்மையில் (20.06.2026) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தேசிய நல்லிணக்கம் மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவூட்டும் முகமாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்தவர்களிடம்
பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கருணநாதன் இளங்குமரன், வைத்தியர் ச.ஸ்ரீபவானந்தராஜா, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன்,
காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள் , காணாமல் போனவர்களின் உறவினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


