திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையானது (17) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில நடைபெற்றது.
இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் "ஒரு சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பத்திரிகையாளர்களின் பங்கு" என்ற கருப்பொருளில் இப்பயிற்சியானது நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் டியூட்டர் வீரசிங்க மற்றும் தினகரன் பிரதம ஆசிரியர் தேவதாசன் செந்தில் வேலவர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவர் பிரியான் விஜபண்டரா, லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர் பீட பணிப்பாளர் சிசிறியப்பா ஆகியோரும் கலந்துகொண்டதோடு மட்டுமன்றி ஊடகத்துறை சார்ந்த பல்வேறுபட்ட விடயங்களை எடுத்து கூறினர்.
மேலும் இதன்போது ஊடகவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலும் வழங்கப்பட்டன.
இலங்கை பத்திரிகை பேரவையின் உதவி பத்திரிகை ஆணையாளர் சுரோச்சன இரங்க அவர்களின் நன்றி உரையுடன் இப்பயிற்சி பட்டறையானது இனிதே நிறைவடைந்தது.
இதன்போது கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுக்கு இலங்கைப் பத்திரிகைப் பேரவையினால், பிரயாணக் கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் பிராந்திய செய்தியாளர்களாக கடமையாற்றும் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.