திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 68% ஆன வாக்களிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 68% ஆன வாக்களிப்பு
  • :
 
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 68% ஆன வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது.
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது நாடளாவிய ரீதியில் இன்று (06) காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில்  வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மிகவும் சுதந்திரமான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் மொத்தமாக 68% ஆன வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது என திருகோணமலை அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்கள் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் 321 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுற்றதை தொடர்ந்து 129  நிலையங்களில் வாக்கெண்ணல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதென மேலும் தெரிவித்தார்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]