சுகாதாரப் பராமரிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன், கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் முதலாவது  தொகுதி தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில்  ஆரம்பிக்கப்பட்டது.

சுகாதாரப் பராமரிப்பு முறையை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கத்துடன், கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் முதலாவது  தொகுதி தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில்  ஆரம்பிக்கப்பட்டது.
  • :

நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பில் ஒரு சிறந்த மாற்றத்தைக் ஏற்படுத்தும் வகையில், ஆரம்ப சுகாதார டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு (Cluster Health Information System) (CHIS) நேற்று (05) தம்புத்தேகம ஆதார மருத்துவமனையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பேசிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ, இந்த கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பு நாட்டின் சுகாதார அமைப்பின் டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு முக்கிய படிக்கல்லாகும் என்றும், நாட்டில் சுகாதார சேவைகளை மறுசீரமைக்க சுகாதார அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் மற்றொரு பகுதியாகும் என்றும் கூறினார்.

இந்த சுகாதார அமைப்பு வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும், விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட பராமரிப்பு சேவையை வழங்கவும், பெற்றுக்கொண்ட தரவு அடிப்படையிலான முடிவுகளை வழங்கவும் உதவும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மற்றும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நோயாளியின் சுகாதாரப் பதிவுகள், எக்ஸ்ரேக்கள், ஆய்வக சோதனை முடிவுகள், மருந்துச்சீட்டுகள் மற்றும் சிகிச்சைகள் மற்றும் நோயாளியின் மருத்துவ வரலாறு குறித்த தரவுகளைப் பெற்றுக்கொள்ள  இலகுவாக அமையும்  என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சிகிச்சை பெறுவோரின் உடல்நலம் குறித்த சரியான தரவுகள் மற்றும் உண்மைகளை மிகக் குறுகிய காலத்தில் ஆய்வு செய்ய முடியும் என்பதால், இது சிறந்த சிகிச்சை வழங்குவதை எளிதாக்கும்.

ஒரு பிராந்திய மருத்துவமனையில் ஆய்வகம் இல்லையென்றால், அதே கிளஸ்டருக்குள் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சோதனை மாதிரிகளை அனுப்பும் வகையில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இது மீண்டும் மீண்டும் பரிசோதனை செய்வதைக் குறைத்து, நோயாளிகளுக்குத் தேவையான பராமரிப்பை திறமையாகப் பெறுவதை எளிதாக்கும். மேலும், மருத்துவப் பதிவுகளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு வர வேண்டிய அல்லது முடிவுகளுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இந்தப் புதிய சுகாதாரத் தகவல் அமைப்பு, அந்த சிரமங்களை நீக்கி, நேரத்தை மிச்சப்படுத்தி, செலவுகளைக் குறைத்து, சிறந்த பராமரிப்பை வழங்குவதன் மூலம் சிறந்த மற்றும் நோயாளிகளுக்கு உகந்த சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை உருவாக்க உதவும். மேலும், மக்கள் சரியான நேரத்தில், சரியான இடத்தில், தேவையற்ற தாமதங்கள் அல்லது செலவுகள் இல்லாமல் சரியான பராமரிப்பைப் பெறுவதையும் இது உறுதி செய்யும்.

சுகாதார அமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் Health System Enhancement Project கீழ் ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சுகாதார தகவல் அமைப்பை உருவாக்குவதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியையும் வழங்கியுள்ளது.

இந்தக் கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் மூலம், கல்னேவ, எப்பாவல, தலாவ, ராஜாங்கனய யாய 5 மற்றும் யாய 7, நெகம்பஹா, கட்டியாவ ஆகிய பிராந்திய மருத்துவமனைகள் மற்றும் கல்னேவ, தலாவ மற்றும் ராஜாங்கனய சுகாதார மருத்துவ அதிகாரிகளின் அலுவலகங்கள் தம்புத்தேகம அடிப்படை மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில், நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இந்த அமைப்புடன் படிப்படியாக இணைக்க சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. கிளஸ்டர் சுகாதார தகவல் அமைப்பின் தொடக்கத்திற்குப் பிறகு, அமைச்சர் தம்புத்தேகம அடிப்படை மருத்துவமனையின் கண்காணிப்பு விஜயத்திலும் பங்கேற்றார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]