நீர்ப்பாசன மறுமலர்ச்சிக்கான கல் ஓயா நீர்ப்பாசன புனரமைப்புத் திட்டமான “வாரி மகிம - அபே உறுமய”வின் ஆரம்ப விழா நேற்று (05) விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் கல் ஓயா இவுரு நைனகாடுவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அரச அதிகாரிகள், பொது பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.