கொழும்பு 07ல் அமைந்துள்ள சிறிமாவே பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் பாடசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் அண்மையில் (04) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க, பாராளுமன்றத்தின் சட்டவாக்கத் திணைக்களத்தின் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் அமல் எதிரிசிங்க மற்றும் சிறிமாவே பாண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் (கலாநிதி) ஜே.சுமேதா ஜயவீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.