பயிலுநர்களை செயன்முறைப் பயிற்சிக்காக அரசாங்க தாபனங்களுக்கு இணைப்புச் செய்தல் தொடர்பான சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது.
அச்சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது...
பயிலுநர்களை செயன்முறைப் பயிற்சிக்காக அரசாங்க தாபனங்களுக்கு இணைப்புச் செய்தல் தொடர்பான சுற்றறிக்கை பொதுத் திறைசேரியின் இணக்கப்பாட்டுடன் வெளியிடப்பட்டுள்ளது.
அச்சுற்றறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது...
விமான நிலையத்துக்கு வருகை தரும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆரம்ப நடவடிக்கையாக நேற்று முதல் விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வரை தனியார் பஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
2025 ஜூன் மாதம் 05 திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஜூன் மாதம் 05 திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப் பிரதேசங்களிலும் வடக்கு, வடமத்தி வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது பயணிக்கும் காற்று மணிக்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
Today weather
தேசிய ஊடகக் கொள்கை ஊடகவியலாளர்களின் தொழில் நிபுணத்துவத்தைப் பாதுகாப்பதற்கானதே என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த தேசிய ஊடகக் கொள்கை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தயாரிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஊடகக் கொள்கையைத் தயாரிப்பிற்காக அப்போதைய அரசாங்கத்தினால் 23 பேரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழு நாட்டின் வெகுஜன ஊடகத்துடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிபுணர்கள், ஊடகத்துறை நிபுணர்கள் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என அரச ஊடகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை உள்ளடக்கியதாக இக்குழுவின் அங்கத்தவர்களாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களுக்கு இடையே பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அதற்காக ஊடக அமைச்சு அவசியமான வசதிகளை வழங்கி இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மீண்டும் புதிய அரசாங்கத்திற்கு தான் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர், இந்த கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்வதாகவும், சில ஊடக நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு இணங்க, இதற்கான கருத்துக்களை முன் வைப்பதற்கான சந்தர்ப்பம் குறைவாக கிடைக்கப்பெற்ற நபர்களுக்கு தமது யோசனைகளை முன் வைப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதற்காக சந்தர்ப்பம் கிடைக்காத நபர்களுக்கு கடந்த 28 ஆம் திகதி வாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும், அதன் போது தயாரிக்கப்பட்டிருந்த தேசிய ஊடகக் கொள்கை சட்டமூலம் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்பட்டதாகவும், அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தேசிய ஊடக கொள்கை அன்றி சட்டமொன்று அல்ல என வலியுறுத்திய அமைச்சர், இதனால் கருத்து மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்படுவதாகவும், ஒவ்வொரு தனிநபர் அடையாளம், , கௌரவம் மற்றும் தனியுரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், , ஊடகவியலாளர்கள் விரும்பினால் இந்த தேசியக் கொள்கைத் தயாரிப்பை முன்னெடுத்துச் செல்வதாகவும் அமைச்சர் விபரித்தார்.
பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளினால் சாட்சியங்களின் சத்தியக்கடதாசிகள் பிரதிவாதியான பொலிஸ்மா அதிபர் தரப்புக்கு இன்று (03) வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) நேரில் சென்று பார்வையிட்டதுடன்(ஜூன் 03) அது தொடர்பிலான மதிப்பிடுகளையும் மேற்கொண்டார்.
அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான கௌரவ ரிச்சர்ட் மார்ல்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய தூதுக்குழு, பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) உடன் நேற்று (ஜூன் 03) கொழும்பில் உள்ள அவரின் அலுவலகத்தில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு போல் ஸ்டீவன்சும் இதன்போது சமூகமளித்திருந்தார்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
உள்நாட்டு பால் தொழிற்துறையை செயல்திறன் மற்றும் வினைத்திறனுள்ள வர்த்தகமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்
- ஜனாதிபதி
இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலிய புதிய அரசாங்கம் பாராட்டு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலிய பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸுக்கும் (Richard Marles) இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
உள்நாட்டில் அவசியமான தரத்திலான சோளம் பெற்றுக் கொள்வதற்கு காணப்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, திரிபோச உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வதற்காக வருடத்திற்கு அவசியமான உரிய தரத்துடனான சோளத்தை ஸ்ரீலங்கா திரிபோஷ வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினால் இறக்குமதி செய்வதற்காக, இறக்குமதி அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (02) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]