தேசிய ஊடகக் கொள்கை ஊடகவியலாளர்களின் தொழில் நிபுணத்துவத்தைப் பாதுகாப்பதற்கானதே என அமைச்சரவை பேச்சாளர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இந்த தேசிய ஊடகக் கொள்கை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தயாரிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டதாகவும், ஊடகக் கொள்கையைத் தயாரிப்பிற்காக அப்போதைய அரசாங்கத்தினால் 23 பேரைக் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் குழு நாட்டின் வெகுஜன ஊடகத்துடன் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிபுணர்கள், ஊடகத்துறை நிபுணர்கள் ஊடகத்துறையுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் என அரச ஊடகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை உள்ளடக்கியதாக இக்குழுவின் அங்கத்தவர்களாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவர்களுக்கு இடையே பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அதற்காக ஊடக அமைச்சு அவசியமான வசதிகளை வழங்கி இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மீண்டும் புதிய அரசாங்கத்திற்கு தான் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர், இந்த கலந்துரையாடலை முன்னெடுத்துச் செல்வதாகவும், சில ஊடக நிறுவனங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு இணங்க, இதற்கான கருத்துக்களை முன் வைப்பதற்கான சந்தர்ப்பம் குறைவாக கிடைக்கப்பெற்ற நபர்களுக்கு தமது யோசனைகளை முன் வைப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
இதற்காக சந்தர்ப்பம் கிடைக்காத நபர்களுக்கு கடந்த 28 ஆம் திகதி வாய்ப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும், அதன் போது தயாரிக்கப்பட்டிருந்த தேசிய ஊடகக் கொள்கை சட்டமூலம் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்பட்டதாகவும், அது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தேசிய ஊடக கொள்கை அன்றி சட்டமொன்று அல்ல என வலியுறுத்திய அமைச்சர், இதனால் கருத்து மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரம் பாதுகாக்கப்படுவதாகவும், ஒவ்வொரு தனிநபர் அடையாளம், , கௌரவம் மற்றும் தனியுரிமை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், , ஊடகவியலாளர்கள் விரும்பினால் இந்த தேசியக் கொள்கைத் தயாரிப்பை முன்னெடுத்துச் செல்வதாகவும் அமைச்சர் விபரித்தார்.