திரிபோஷா உற்பத்திக்காக அவசியமான தரத்திலான சோளம் இறக்குமதிக்கு நடவடிக்கை

திரிபோஷா உற்பத்திக்காக அவசியமான தரத்திலான சோளம் இறக்குமதிக்கு நடவடிக்கை
  • :

உள்நாட்டில் அவசியமான தரத்திலான சோளம் பெற்றுக் கொள்வதற்கு காணப்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு, திரிபோச உற்பத்தியை தொடர்ந்து மேற்கொள்வதற்காக வருடத்திற்கு அவசியமான உரிய தரத்துடனான சோளத்தை ஸ்ரீலங்கா திரிபோஷ வரையறுக்கப்பட்ட நிறுவனத்தினால் இறக்குமதி செய்வதற்காக, இறக்குமதி அனுமதி பத்திரத்தை வழங்குவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (02) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சினால் மேலதிக போசனை உணவுகளாக சகல கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் (குழந்தை பிறந்து 06 மாதங்கள் வரை) மற்றும் போசனைக் குறைபாடுள்ள ஆறு மாதங்களுக்கு அதிகமான மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக திரிபோஷா வழங்கப்பட்டு வருகிறது.

திரிபோஷா உற்பத்திக்காக சோளம் மற்றும் சோயா போஞ்சி பிரதான உள்ளீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை திரிபோஷா வரையறுக்கப்பட்ட நிறுவனத்திற்காக வருடாந்தம் 18,000 மெற்றித்தொன் சோளம் தேவைப்படுவதுடன் மாதாந்தம் 1,500 மெற்றித்தொன் சோளம் அவசியமாகின்றது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]