மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
மருந்து விநியோகச் சங்கிலியில் இடையூறுகள் குறைக்கப்படும் வரை, பற்றாக்குறையான மருந்துகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து நேரடியாக உதவி பெற சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு "Clean Sri Lanka" ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வாய்க்கால்களை நிலையாக பேணுவதை இலக்காக கொண்டு அவற்றை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று (30) நகர அபிவிருத்து, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமையில் நடைபெற்றது.
நகர பகுதிகளில் வாய்க்கால்களை அண்டிய சுற்றுச் சூழல் சுத்தப்படுத்தும் பணி நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய வளாகத்தின் அருகில் காணப்படும் பொல்துவ வாய்க்காலிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சு அமைச்சின் கீழுள்ள இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சுற்றாடல், சமூகம், ஒழுக்கம் உள்ளிட்ட மூன்று தூண்களை முதன்மைப்படுத்திய "Clean Sri Lanka" வேலைத்திட்டத்தின் கீழ் நீரின் தரத்தை பாதுகாத்தல் மற்றும் வௌ்ளத்தை கட்டுப்பத்துவதற்கான சர்பன்டைன் வாய்க்கால், செபஸ்தியன் வாய்க்கால்,மாவதகம வாய்க்கால், தெமடகொட வாய்க்கால் உள்ளிட்ட கொழும்பு தலைநகரின் பிரதான வாய்க்கால்கள் சுத்தப்படுத்தப்பட்டு பேணப்படும்.
இதன்போது "Clean Sri Lanka" செயலகத்தின் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் எஸ்.பீ.சீ.சுகீஸ்வர, நகர அபிவிருத்தி, நிர்மானம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, இலங்கை காணி அபவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சமன் ஸ்ரீ செனவீர, பதில் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஏ.எச்.துஷாரி, பதில் மேலதிக நிறைவேற்று அதிகாரி எஸ்.பீ.முதுமால உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்
Gem City சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி 2025 " ஆகஸ்ட் 15 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இரத்தினபுரியில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கல்விக்கான உதவி வழங்கல் நிகழ்வும், மருத்துவ போக்குவரத்து கொடுப்பனவு வழங்கும் நிகழ்வும், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி தலைமையில் நேற்று (29) கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தேசிய ஊடகக் கொள்கையை வகுப்பது தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெறுவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் தலைமையில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது
காற்று மாசுறுதல் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ளும் தினம், 2025 மே மாதம் 31ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. ஜூன் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சுற்றுச் சூழல் தினத்துடன் இணைந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது.
• ஐரோப்பிய ஒன்றியத்தை போலவே போலந்துக்கும் இலங்கை முக்கியமான நாடு
-போலந்து வெளிவிவகார அமைச்சர் ரடொஸ்லாவ் சிகோர்ஸ்கி
தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம்
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (30) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
விவசாயம், வர்த்தக மற்றும் கைத்தொழில், உட்கட்டமைப்பு மனித வள அபிவிருத்தி, சுற்றாடல் முகாமைத்துவம், சமூகப் பாதுகாப்பு, தொடர்பாடல், தொழில்நுட்ப ம் மற்றும் ஆராய்ச்சி, நல்லாட்சி, போன்ற அடிப்படை 8 பிரிவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
"வறுமையை ஒழிப்பதில் அரசாங்கத்தின் ஆர்வம் பாராட்டத்தக்கது." ஐக்கிய நாடுகள் சபையின் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே ஃப்ரெஞ்ச் இங்கு குறிப்பிடப்பட்டார். தற்போதைய அரசாங்கத்தின் பல அமைச்சரவை அமைச்சர்களை தான் சந்தித்ததாகவும், அவர்கள் அனைவரும் வறுமையை ஒழிப்பதில் ஆர்வமாக இருப்பதாகவும், இது ஒரு நல்ல போக்காக தான் கண்டதாகவும் அவர் கூறினார். நேற்று முன்தினம் (27) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது திரு. மார்க் ஆண்ட்ரூ இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மருத்துவக் கல்லூரி கவுன்சிலின் (CMCC) புதிய பதிவாளர் பதவிக்கு பேராசிரியர் ஜெனிபர் பெரேராவை நியமிக்க சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நடவடிக்கை எடுத்தார், அதற்கான நியமனக் கடிதத்தை சுகாதார மற்றும் வெகுசன ஊடக பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் வைத்து அவருக்கு வழங்கினார்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]