2025 ஜூன் 02 முதல் சாதாரண அலுவலக நேரங்களில் மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்

2025 ஜூன் 02 முதல் சாதாரண அலுவலக நேரங்களில் மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்கப்படும்
  • :

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

24 மணி நேர கடவுச் சீட்டு விநியோக சேவை 2025, மே மாதம் 30 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என்றும், அதன்படி, 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் சாதாரண அலுவலக நேரங்களில் மாத்திரமே கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராமன்ற அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலுக்கு உட்பட்டு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், அதன் அவசர சேவைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, 2025 பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கியது.

அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 24 மணி நேரமும் தனது சேவையை வழங்க விரும்பிய நோக்கங்கள் நேர்மறையான முறையில் அடையப்பட்டுள்ளன, மேலும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளின் உற்பத்தித்திறன், அதை 24 மணி நேரமும் திறந்து வைத்திருப்பதற்கான செலவு மற்றும் ஒரு நாளைக்கு கடவுச் சீட்டு பெற வருபவர்களின் எண்ணிக்கையில் படிப்படியான குறைவு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, 24 மணி நேர கடவுச் சீட்டு விநியோக சேவை 2025 மே மாதம் 30 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என்றும், அதன்படி, 2025 ஜூன் மாதம் 02 ஆம் திகதி முதல் சாதாரண அலுவலக நேரங்களில் மாத்திரமே கடவுச் சீட்டு விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]