Gem City சர்வதேச மாணிக்கக் கல் கண்காட்சி 2025 " ஆகஸ்ட் 15 ஆம் திகதியில் இருந்து 17 ஆம் திகதி வரை இரத்தினபுரியில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது.
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி, இலங்கை இரத்தினக் கல் வியாபாரிகள் மற்றும் அகழ்வாளர்கள் சங்கம், இலங்கை மாணிக்கக் கல் மற்றும் ஆபரணங்கள் சங்கம் உட்பட கைத்தொழில் மற்றும் துறை சார்ந்தவர்கள் பலரின் ஏற்பாடாக "Gem City சர்வதேச இரத்தினக் கல் மற்றும் ஆபரணங்கள் கண்காட்சி 2025" நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இரத்தினக் கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலில் எதிர்பார்த்த 1பில்லியன் ஏற்றுமதி வருமான இலக்கை அடைவதற்காக அவசியமான பங்களிப்பை வழங்குவதும் இரத்தினக் கல் வர்த்தகத்தில் கேந்திர நிலையமாக இரத்தினபுரி நகரை சர்வதேச ரீதியாக கைப்பற்றியுள்ள புகழை மேலும் உறுதிப் படுத்திக் கொள்வதும் இக்கண்காட்சியின் நோக்கமாகும்.
100 க்கும் அதிகமான கண்காட்சிக் கூடங்களைக் கொண்டுள்ள இக்கண்காட்சியில் இரத்தினக் கல் விற்பனைக்கு மேலதிகமாக இரத்தினக் கல் மற்றும் ஆபரண உற்பத்தி மற்றும் புதிய நிருமாணம் போன்றவற்றுக்கான அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.
அவ்வாறே சிறிய மற்றும் நடுத்தர இரத்தினக் கல் கைத்தொழிலாளர்களுக்காக சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இரத்தினக் கல் வியாபாரிகளுக்கு சர்வதேச இரத்தினக்கல் முகவர்களுடன் தொடர்பு படும் வாய்ப்பு இந்த
"Gem City சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி 2025" மூலமாக கிடைக்கும். .
சீனா, இந்தியா, வியட்நாம், ஜேர்மன், தாய்லாந்து போன்ற நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரத்தினக் கல் மற்றும் ஆபரணக் கைத்தொழில் மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச பிரதிநிதிகள் பலர் இக் கண்காட்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.