விவசாயம், வர்த்தக மற்றும் கைத்தொழில், உட்கட்டமைப்பு மனித வள அபிவிருத்தி, சுற்றாடல் முகாமைத்துவம், சமூகப் பாதுகாப்பு, தொடர்பாடல், தொழில்நுட்ப ம் மற்றும் ஆராய்ச்சி, நல்லாட்சி, போன்ற அடிப்படை 8 பிரிவுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பூரண மேற்பார்வையின் கீழ் இரத்தினபுரி ஒன்றிணைந்த அபிவிருத்தி திட்டத்தைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் கே. ஜீ. எஸ். நிஷாந்த தெளிவுபடுத்தினார்.
இரத்தினபுரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பத்மகுமாரவின் தலைமையில் இடம்பெற்றது.
இரத்தினபுரி மாவட்ட ஊடகப் பிரிவு