நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
தாதியர் சேவை வரலாற்றில் முதல் தடவையாக 3,147 பேருக்கு இன்று (24) அலரி மாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்பட்டன
நாட்டின் தேங்காய் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக உள்ளூரில் தேங்காய் உற்பத்தி செய்யும் நோக்கில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட வடக்கு தெங்கு முக்கோண வலய திட்டத்தின் கீழ், 2025-2026 ஆண்டுகளில் 40,000 ஏக்கர் தென்னைகளை பயிரிட எதிர்பார்க்கப்படுவதாக தென்னை அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தரளவுக் கைத்தொழிலாளர்களை முன்னேற்றுவதற்காக கைத்தொழில் அமைச்சு மேற்கொள்ளும் திட்டங்கள் தொடர்பாக மிகவும் மகிழ்ச்சி அடைவதாக ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் பொதுச் செயலாளர் கலாநிதி இந்திரா பிரதான சிங்கவிந்த ( Indra Pradhana Singawinta) தெரிவித்தார்.
சுகாதாரம், வெகுசன ஊடகம் மற்றும் மகளிர் வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவிக்கு தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளின் விடுமுறை தினம் திருத்தப்பட்ட மையினால் 2025 மே 25 மற்றும் 26 ஆம் திகதி இரண்டு நாட்களும் பாடசாலை நடைபெறும் என கல்வி அமைச்சர் அறிவித்துள்ளது.
முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் (ஈதுல் அழ்ஹா) 2025 ஜூன் 07 ஆம் திகதி சனிக்கிழமை வருவதனால், 2025.06.06 மற்றும் 2025.06.09 திங்கட்கிழமை சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பாடசாலை விடுமுறை தினத்திற்காக 2025.05.26 திங்கட்கிழமை மற்றும 2025.05.27 செவ்வாய்க்கிழமை தினங்களில் பாடசாலை நடைபெற வேண்டும் என்பதுடன், அதன்படி, 2025 பாடசாலை வருடத்தின் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 2025.05.26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுவதாகவும் அந்த அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 மே மாதம் 24 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2025 மே 24 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன் தீவின் சில இடங்களில் மழை சிறிய அளவில் பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம் உள்ளது.
மத்திய மலை நாட்டின் சரிவுப் பிரதேசங்களில் மற்றும் வடக்கு, வடமத்தி, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு (30-40) கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசும்.
இடியுடன் கூடிய மழை பெய்யுடன் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்றுக் காரணமாக மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் பாதிப்பை தவிர்ப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
Weather today
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் ஐ.எம் கருணாதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சுற்றுலாத் துறையில் பங்குதாரர்களை செயற்திறனுடன் இணைக்கின்ற நாட்டின் மிகப்பெரிய சுற்றுலா கண்காட்சியான " சஞ்சாரக உதாவ 2025", இன்று (23) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) தயாசிறி ஜயசேக்கர அவர்கள் 2025 மே மாதம் 20 ஆம் திகதி சபா பீடத்தில் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சபாநாயகருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கவனத்தில் கொண்டு, அது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளரான (திருமதி) ஹேமாலி வீரசேகர அவர்களின் தலைமையில் கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கௌரவ எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக்க ஆகியோர் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமித்திருப்பதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (23) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
🔸 பாராளுமன்றத்தில் சைகைமொழி உரைபெயர்ப்பு வசதியை விஸ்தரிக்க நடவடிக்கை
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மே 22 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான ஒத்துழைப்புக்கு பங்களிக்கும் வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் விரிவான மீளாய்வுக்காக காத்திருக்கும், வெளிநாட்டு உதவிகளுக்கு அண்மையில் மூன்று மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் பிரதிநிதிகள் குழு விளக்கியது.
முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில், குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பான வீட்டுவசதித் திட்டத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் ஆதரவு பொறிமுறை சீர்குலைவதால் ஏற்படக்கூடிய பரந்த மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அபிவிருத்தியில் உலகளாவியளவில் அமெரிக்காவின் முக்கிய பங்கு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு, தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கான மாற்று வழிகளை அடையாளம் காண அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதிலும், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதிலும் அமெரிக்கா விதித்துள்ள வரிகளின் தாக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில், USAID இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான செயற்திட்ட பணிப்பாளரும் திட்ட அலுவலக பணிப்பாளருமான திருமதி மௌரீன் ஹ்சியா, பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவு தொடர்பான அலுவலகத்தின் பதில் பணிப்பாளர நாயகம் ஏஞ்சலினா ஹெர்மன், பொருளாதார அபிவிருத்தி அலுவலகத்தின் திட்ட முகாமைத்துவ நிபுணர் நிர்மி விதாரண, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளியுறவு அமைச்சின் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் பிரமுதித முனசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் ஊடகப் பிரிவு.
இலங்கையில் தற்போது ஒரு புதிய COVID-19 திரிபு பரிசோதனைக்கு உட்படுத்தபட்டது. தொற்றுநோயியல் பிரிவின் தரவுகளின் அடிப்படையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]