All Stories

இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 மார்ச் 24 மற்றும் 25 ம் திகதிகளில் யாழ். குடாறாட்டிற்கான விஜயம் மேற்கொண்டார்.

இராணுவத் தளபதி யாழ் குடாநாட்டிற்கு விஜயம்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண முதல் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

மூன்று அரசு ஊடக நிறுவனங்களையும் தனித்தனியாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிடுகிறது

மூன்று அரச ஊடக நிறுவனங்களையும் தனித்தனியாக அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் தலையிட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

சுயாதீனத் தொலைக்காட்சி, இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் ஆகியவற்றை இணைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். இந்த மூன்று நிறுவனங்களும் தனித்தனியாக நவீனமயமாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்த விஷயத்தில் அரசாங்கம் தலையிட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

 

 

இந்த நிறுவனங்களை நவீனமயமாக்கவும், இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றவும், பொது சேவையாக்குவதற்காக நிர்வாகத்துடன் இணைந்து தேவையான தலையீடுகளை அரசாங்கம் வழங்கும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார்.

 

கடந்த ரணில் விக்கிரமசிங்க நிர்வாகத்தின் போது, ​​இந்த நிறுவனங்களின் எதிர்கால வளர்ச்சிக்குத் தடையாக பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டதாகவும், சில அமைச்சரவை முன்மொழிவுகள் நிறைவேற்றப்பட்டதால் இந்த நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்பு கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் கௌரவ அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

 இலங்கை - பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு

அரச சேவைக்கான சம்பளத் திருத்தம் - 2025

2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச சேவையின் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையின் அடிப்படையில் 2025.04.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்திற்கமைய சம்பளக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுவதற்கு அமைச்சரவை கீழ்;க்காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

அரச சேவைக்கான சம்பளத் திருத்தம் - 2025

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு விசாகா கல்லூரி மாணவிகள் பழைய பாராளுமன்றத்திற்கு வருகை

ஜனாதிபதி செயலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவற்றால் பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டத்துடன் இணைந்ததாக, கொழும்பு விசாகா கல்லூரியின் விசேட பாராளுமன்ற அமர்வு ​நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற பீடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

விசேட மாணவர் பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்கு விசாகா கல்லூரி மாணவிகள் பழைய பாராளுமன்றத்திற்கு வருகை

பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் 

இலங்கை போன்ற நாடுகளுக்கு, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின அடிப்படையிலான வன்முறையை நீக்குவதற்கும் THRIVE போன்ற கூட்டு முயற்சிகள் அவசியம்

பாலின சமத்துவமின்மை என்பது பெண்களின் பிரச்சினை அல்ல, இது உளப்பான்மை மற்றும் நடத்தை மாற்றத்தை வேண்டிநிற்கும் ஒரு சமூகப் பிரச்சினை. - பிரதமர் 

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு Levan S. Dzhagaryan இன்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) சந்தித்தார்.

ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

உலக வானிலை ஆராய்ச்சி தினம் - 2025 பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

உலக வானிலை ஆராய்ச்சி தினம் வருடாந்தம் மார்ச் 23 அன்று கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு உலக வானிலை அமைப்பின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

உலக வானிலை ஆராய்ச்சி தினம் - 2025 பாதுகாப்பு பிரதி அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

 நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]