All Stories

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் புதிய செயலாளராக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்

 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி பீ.கே.கோலித கமல் ஜினதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்



ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய இரண்டு நூல்கள் பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதற்காக பிரதமரிடம் கையளிப்பு


இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகமாகவும், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் செய்தி அறிவிப்பாளராகவும் பணியாற்றிய சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய " சொல்லும் செய்திகள்" மற்றும்" தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு " என்ற தலைப்பிலான இரண்டு நூல்கள் மே மாதம்19 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கு வழங்கப்பட்டன.

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என். மதியழகன் எழுதிய இரண்டு நூல்கள் பாடசாலை நூலகங்களுக்கு வழங்குவதற்காக பிரதமரிடம் கையளிப்பு

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று நாட்டிலிருந்து செல்லவுள்ள தூதுவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

 இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று எதிர்வரும் நாட்களில் நாட்டிலிருந்து செல்லவுள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 19 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

 

இந்தியாவுக்கான உயர் ஸ்தானிகர் பீ.எம் கொலன்னே,

நியூயோர்க்கிற்கான தூதுவர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜயந்த ஜயசூரிய,

கியூபாவுக்கான தூதுவர் ஆர்.எம். மஹிந்ததாச ரத்நாயக்க,

பாகிஸ்தானுக்கான் உயர் ஸ்தானிகர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன,

ஜப்பான் நாட்டுக்காக பேராசிரியர் பி. ஜானக குமாரசிங்க,

ஐக்கிய அரபு அமீரகத்திற்காக பேராசிரியர் அருஷா குரே, ஐக்கிய இராச்சியத்திற்காக எஸ்.டி.என்.யூ சேனாதீர

ஆகியோர் விரைவில் உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களாகப் புறப்பட உள்ளனர்.

 

புதிய தூதர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் தமது பதவிக் காலத்தில் இலங்கைக்காக செயற்படுத்த எதிர்பார்த்துள்ள விடயங்கள் குறித்தும் பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், பிரதமர் தூதுவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, வெளிவிவகார அமைச்சின் மனிதவளம் மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் நாயகம் சுமித் தசநாயக்க உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான புதிய தூதுவர்களாக நியமனங்களைப் பெற்று நாட்டிலிருந்து செல்லவுள்ள தூதுவர்களுக்கு பிரதமர் வாழ்த்து

கொட்டுகச்சிய கச்சிமடுவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது



பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கொட்டுகச்சிய கச்சிமடுவ நீர்த்தேக்கம் மீண்டும் நிரம்பி வழிவதாக புத்தளம் நீர்ப்பாசன பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு மூன்றாவது முறையாக கச்சிமடுவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளதாக புத்தளம் நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. 

கொட்டுகச்சிய கச்சிமடுவ நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது

வானிலை முன்னறிவிப்பு 

2025 மே மாதம்  20 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 

 2025 மே மாதம்  20 ஆம் திகதி காலை  05.30 மணிக்கு வெளியிடப்பட்டது 

 தென்மேற்கு பருவ காலநிலை நிலை பெற்று வருகிறது. 

 மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, புத்தளம், நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கு அதிகமான மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.

 வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

 கிழக்கு மாகாணத்தில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். 

 

வடமேல், வடமத்தி, வடக்கு, மத்திய மற்றும் தென்மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு (30-40) கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம்.

 

இடியுடன் கூடிய மழையினால் ஏற்படக்கூடிய தற்காலிக கடும் காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படும் அபாயங்களை குறைப்பதற்காக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

 வானிலை முன்னறிவிப்பு 

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

இன்று (19) முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாடு பூராகவும் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம்

“ஜனாதிபதி நிதியம் வெற்றிகரமாக பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது” - ஜனாதிபதியின் செயலாளர்

மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு (17) ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.

“ஜனாதிபதி நிதியம் வெற்றிகரமாக பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது” - ஜனாதிபதியின் செயலாளர்

மிஹிந்து செத் மெதுரவில் தங்கி சிகிச்சை பெறும் படையினரின் நலன் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (19) காலை அத்திடியவில் உள்ள 'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

மிஹிந்து செத் மெதுரவில் தங்கி சிகிச்சை பெறும் படையினரின் நலன் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார்

இன்று (19) நடைபெறவுள்ள தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பத்தரமுல்லை பகுதியில் நடைமுறைப்படுத்தியுள்ள போக்குவரத்துத் திட்டம் - பொலிஸ் தலைமையகம்

16 வது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) மாலை 04.00 மணி முதல் 06.30 மணி வரை பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள போர் வீரர் நினைவுச் சின்ன வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று (19) நடைபெறவுள்ள தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பத்தரமுல்லை பகுதியில் நடைமுறைப்படுத்தியுள்ள போக்குவரத்துத் திட்டம் - பொலிஸ் தலைமையகம்

நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் படிப்படியாக நிலைபெற்று வரும் தென்மேற்கு பருவமழை
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]