போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பொலன்னறுவைப் பிரதேச 12 நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போலியாகத் தயாரித்து அதிக விலைக்கு உரம் விற்பனை செய்த பொலன்னறுவைப் பிரதேச 12 நபர்கள் நேற்று (14) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெரண்டியெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (14) போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024(2025) அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் 2025.05.21 முதல் 2025.05.31 வரை நாடுபூராகவும், 1228 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் பின்வருமாறு:
கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரை , ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் "வெசாக் பக்திப் பாடல் இசைத்தல்", நிகழ்வு மூன்றாவது நாளாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நேற்று (14) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமானது.
2024/2025 ஸ்ரீபாத யாத்திரை காலத்தின் முடிவைக் குறிக்கும் வகையில், நினைவுச்சின்ன கலசம் மற்றும் சமன் கடவுளின் சிலை நேற்று (14) பெல்மடுல்ல, கல்பொத்தவெல, ஸ்ரீபாத ரஜமஹ விஹாரையில் வைக்கப்பட்டன.
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய மட்ட வேலைத்திட்டம் இன்று (14) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று (15) ஏலமிடப்படவுள்ளன.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தற மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'தியவன்னா வெசாக் பௌத்த பக்தி கீதம்' நிகழ்வு எதிர்வரும் 2025.05.16 ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும், ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் "வெசாக் பக்திப் பாடல் இசைத்தல் நிகழ்வு ", இரண்டாவது நாளாக நேற்று (13) மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஆரம்பமானது.
தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (மே மாதம் 03 மற்றும் 04) இரண்டு நாட்கள் ஒலிவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
வருடாந்த புதிய தேயிலை விழா நேற்று (13) எட்டாவது தடவையாக பதுளை முதியங்கன ரஜ மகா விஹாரையில் இடம்பெற்றது.
150 வருடங்களுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இலங்கை தேயிலை கைத்தொழிலின் பிரதான கலாச்சார பாரம்பரியமான இந்த விழாவிற்கு தேயிலையை உற்பத்தி செய்யும் மாவட்டங்களை உள்ளடக்கியதான தொழிற்சாலை உரிமையாளர்கள், தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் தேயிலைத் துறையுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் பங்கேற்றனர்.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]