தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் (மே மாதம் 03 மற்றும் 04) இரண்டு நாட்கள் ஒலிவிலில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் பாயிஸ் முஸ்தபா தலைமையில் பதில் உபவேந்தர் கலாநிதி யூ. டி. அப்துல் மஜீத்தின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.
இதன்போது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், பிரயோக விஞ்ஞானம், முகாமைத்துவம் மற்றும் வர்த்தகம், கலை மற்றும் கலாச்சாரம் , இஸ்லாமிய நாகரிகம் மற்றும் அரபு மொழி, போன்ற பீடங்களைச் சேர்ந்த 2,077 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
முதல் நாள் முதல் அமர்வில் இலங்கை உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகுடா பங்கேற்றதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் அமர்வுகளில் பேராசிரியர் சீதா பி. பண்டார மற்றும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் ஹாலித் பின் ஹமூத் அல் கஹ்தானி கலந்துகொண்டார்.