“வசத் சிரிய 2026”
ஜனாதிபதி அலுவலக நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வசத் சிரிய 2026” சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழா நேற்று (25) கொழும்பு 02 இல் உள்ள விமானப்படை மைதானத்தில் நாள் முழுவதும் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் விரிவாகத் தெரியப்படுத்தினார்.
இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படும் ‘உத்திசார் சுற்றுச்சூழல் மதிப்பீடு’ தொடர்பான விசேட கலந்துரையாடல், வட மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (24.04.2026) நடைபெற்றது.
2026 ஏப்ரல் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஏப்ரல் 27ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
சுகாதார சேவையின் பௌதீக வளங்களை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கண்டி தேசிய மருத்துவமனைக்கு ரூ. 425 மில்லியன் செலவில் வழங்கப்பட்ட இரண்டு உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டன.
"பதினெட்டு மாதங்களுக்குபோக்குவரத்து செயற்பாட்டுத் திட்டத்தினால் நாட்டில் வீதி விபத்துக்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் பிமல் ரத்நாயக்க முன்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அரசாங்கம், பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பிற்காகப் பல நீடித்த திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
மழை நிலைமை:
காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.
2026 ஏப்ரல் 26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஏப்ரல் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
பொது வசதிகளை முறையாகப் பயன்படுத்துவதும் அவற்றைப் பாதுகாப்பதும் பிரஜைகளின் பொறுப்பாகும். -அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் ஒரு முன்னணி அரசிற்குச் சொந்தமான நிறுவனமான ரக்னா அரக்ஷக லங்கா லிமிடெட் (RALL), அண்மையில் (ஏப்ரல் 23) தனது 2024/2025 நிதியாண்டிற்கான வருவாயிலிருந்து ரூ. 111,110,014.00 இலாப பகிர்வை பொது திறைசேரிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தது. நிறுவனத்தின் தலைவர், பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ (ஓய்வு), கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில், இத்தொகைக்கான காசோலையை பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவிடம் (ஓய்வு) கையளித்தார். அதனைத் தொடர்ந்து, பிரதி அமைச்சர் காசோலையை பொது நிறுவனங்கள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், திருமதி தனீஷா ஜயதேவவிடம் ஒப்படைத்தார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஹய்டி பிரதமர் Hon. Alix Didier Fils-Aime மற்றும் வெளிவிவகார அமைச்சர் Ms. Raina Forbin ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
