All Stories

உலக அமைதி வேண்டி நடத்தப்படும் 'ஏஹி பஸ்ஸிகோ' அமைதிக்கான நடைப்பயணம் நேற்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பம்

உலக அமைதி வேண்டி நடத்தப்படும் "ஏஹி பஸ்ஸிகோ" அமைதிக்கான நடைப்பயணம் இன்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பமானது. இன்றைய தினம் நடைப்பயணம் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த சுமார் 45 கி.மீ தூரத்தை நிறைவு செய்து, மாத்தளை அலுவிஹாரையை தேரர்கள் குழு வந்தடைந்தது.
உலக அமைதி வேண்டி நடத்தப்படும் 'ஏஹி பஸ்ஸிகோ' அமைதிக்கான நடைப்பயணம் நேற்று (22) காலை தம்புள்ளை ரஜமகா விகாரை வளாகத்தில் இருந்து ஆரம்பம்

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கப்பட்டமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பரிமாற்றம்

2026ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களுக்கும், பிரிவேனாக்களின் மாணவ பிக்குகள், சீல மாதாக்கள் உள்ளிட்ட சகல மாணவர்களுக்கும் தேவையான அனைத்துச் சீருடைத் துணிகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கி முடிக்கப்பட்டமையை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு, 2026.04.22 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இடம்பெற்றது.

2026ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பாடசாலைச் சீருடைகளும் சீன மக்கள் குடியரசின் நன்கொடையாக வழங்கப்பட்டமையை உறுதிப்படுத்தும் சான்றிதழ் பரிமாற்றம்

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும் - ஜனாதிபதி 

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்கான 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்கவும்    - ஜனாதிபதி 

வெள்ளப் பேரிடரைத் தடுக்கும் வகையில் வாய்க்கால் சீரமைப்பு – கிளிநொச்சியில் விரைவான முன்னேற்றம்

பணிகளை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.

அம்பாறை மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகளின் தற்போதைய செயல்திறன் மேற்பார்வை விஜயம்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன, அண்மையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல மருத்துவமனைகளின் தற்போதைய செயல்பாடுகளையும், நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகளையும் ஆய்வு செய்தார்.
அம்பாறை மருத்துவமனைகளில் சிகிச்சை சேவைகளின் தற்போதைய செயல்திறன் மேற்பார்வை விஜயம்