மியான்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக (BIA) நாடு திரும்பியது.

மியான்மார் நிலநடுக்கத்தின் பின்னரான நிவாரணப் பணிக்காக சென்ற முப்படைகளின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரணக் குழு பணிகளை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஏப்ரல் 26 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலன் ஊடாக (BIA) நாடு திரும்பியது.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் (M.L.T) மற்றும் இயன்முறை மருத்துவ பதவிக்கு (physiotherapist) பதவிகளுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வு நேற்று (27) நடைபெற்றது.
மழை நிலைமை:
மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாகமாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
.
மருத்துவ ஆய்வக தொழில்நுட்பவியலாளர் (M.L.T) மற்றும் இயன்முறை மருத்துவ பதவிக்கு (physiotherapist)பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டித் தேர்வு இன்று (27) காலை நடைபெற்றது.
ஏற்கனவே திட்டமிட்டபடி ஸ்ரீ தலதா யாத்திரையின் இறுதி நாள் இன்று (27) நிறைவடைவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
அதன்படி , தலதா யாத்திரை இன்று (27) முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 5.30 வரை சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளது.
16 வருடங்களுக்குப் பிறகு இடம்பெரும் தலதா யாத்திரை கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கான தீவு முழுவதையும் சுற்றி உள்ள கடல் பிரதேசத்திற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை நிலை:
தீவைச் சுற்றி உள்ள கடல் பிரதேசங்களில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
காற்று:
தென்மேற்கிலிருந்து தெற்கு நோக்கி வீசும் காற்றின் வேகம் மணிக்கு சுமார் 100 கி.மீ. (20-30) ஆகும்.
சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ. வரை அதிகரிக்கும்.
கடலில் நிலை:
சிலாபம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரை கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது சற்று கொந்தளிப்பாகக் காணப்படும்..
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்தப் பகுதியில் உள்ள கடல் பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசலாம் என்பதுடன் அதன் போது அக்கடல் பிரதேசம் தற்காலிகமாக அதிக அலை ஏற்படலாம்.
2025 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று (2025 ஏப்ரல் 27ஆம் திகதி) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
வெப்பமண்டல ஒருங்கிணைப்பு வலயம் (வடக்கு அரைக்கோளத்தில் மற்றும் தெற்கு அரைக்கோளத்திலிருந்து வரும் காற்று வீசும் பகுதி) தீவின் வானிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மாகாணத்திலும் புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகிறது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வட - மத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்யலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது ஏற்படும் தற்காலிக கடும் காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பூதவுடலுக்கு வெளியுறவு அமைச்சர் இறுதி மரியாதை செலுத்தினார்.
வட மாகாண சபையின் ஆதரவுடன், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய நான்கு மாவட்ட பொது மருத்துவமனைகளும் அரசின் திட்டத்தின்படி அபிவிருத்தி செய்யப்பட்டு, அந்தப் பகுதி மக்களுக்கு தரமான, சிறந்த மற்றும் வினைத்திறனான சுகாதார சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர், திருகோணமலை துறைமுக காவல்துறையுடன் இணைந்து 2025 ஏப்ரல் 22 ஆம் திகதி திருகோணமலை அனுராதபுரம் சந்திப் பகுதியில் மேற்கொண்ட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயாரிக்கப்பட்ட சுமார் அறுநூறு (600) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபரொருவர் (01) இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விடுமுறை வழங்குவதற்காக தொழில் தருணர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் வாக்கெண்ணும் நிலையத்தின் சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]