All Stories

ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

மதுவரித் திணைக்களம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இந்த ஆண்டின் வருமான இலக்குகளை அடைவது போன்ற விடயங்களை நோக்கமாகக் கொண்டு இந்தக் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

வரி சேகரிப்பில் செயல்திறன் மற்றும் நியாய போக்கு என்பவற்றை உறுதி செய்வதற்காக மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைப்பது குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மதுபானம் மற்றும் புகையிலைத் தொழிற்துறையை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் அரச வருமானத்தை அதிகரித்தல், சட்டபூர்வமான வருமானத்தை உருவாக்குவதற்கு வசதிகளை வழங்குதல், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்கக் கூடியவற்றை அமுல்படுத்தல், சட்டவிரோத மதுபானம், அபாயகர ஔடதங்கள் மற்றும் மனோவியல் ஓளடதங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக தீவிர விழிப்புணர்வுத் திட்டங்களை செயல்படுத்துதல், தரமற்ற மதுபானங்களை அருந்துவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதை உறுதி செய்தல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு உதவுவதற்காக, நாட்டில் மதுபானம் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட மதுபானங்களை செயற்திறன் மிக்கதாகவும் பயனுள்ள முறையிலும் கட்டுப்படுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

மூலோபாய மற்றும் செயல்பாட்டு மட்டங்களில் பயனுள்ள முடிவுகள் எடுப்பது மற்றும் முகாமைத்துவ முறைமைகள் ஊடாக வருமானத்தை சேகரிப்பது மற்றும் வருமானப் பாதுகாப்பு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் செயற்திறனை மேம்படுத்துவதற்காக மனிதவள அபிவிருத்தித் திட்டம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வழிகாட்டல் திட்டமொன்றை தயாரிப்பதன் அவசியம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மதுவரி ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா உட்பட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-03-11

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 ஜனாதிபதிக்கும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

அனுராதபுரம், ஹபரண மகா வித்தியாலயத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றியமைப்பதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

"க்ளீன் ஶ்ரீ லங்கா" என்ற தேசிய திட்டத்திற்கு இணங்க, "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலை" என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட, சமூக மதிப்புகள் உட்பட சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கல்விச் சூழலை வளர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கடற்படையின் சமூக பராமரிப்பு பங்களிப்புடன் அனுராதபுரம், ஹபரண மகா வித்தியாலய வளாகத்தை சுத்தம் செய்யும் பணிகள் 2025 மார்ச் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

 அனுராதபுரம், ஹபரண மகா வித்தியாலயத்தை "மகிழ்ச்சி நிறைந்த பாடசாலையாக" மாற்றியமைப்பதற்கு கடற்படை சமூக பணியின் பங்களிப்பு

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் ஒருங்கிணைந்த உதவி மையம்

கேட்கும் திறன் குறைபாடு, பார்வை குறைபாடு போன்ற சிறப்புத் தேவைகள் உள்ள பயணிகளின் வசதிக்காகவும், பொதுப் போக்குவரத்தை அணுகுவதற்கான வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதற்கும், பொதுப் போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஒருங்கிணைப்பு உதவி மையம் ஒன்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

விசேட தேவையுடைய பயணிகளின் வசதிக்காக மாகும்புரையில் ஒருங்கிணைந்த உதவி மையம்

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

அபிவிருத்தியின் முழு பலன்களையும் நியாயமாக அனுபவிக்கும் வளமான சமூகத்தை கட்டியெழுப்புவதே தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

அபிவிருத்தியின் பலன்களை நியாயமாக அனுபவிக்கும் சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் - ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

அரசாங்க சேவையின் 5,882 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

அரசாங்க சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முன்னுரிமை மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு அதனுடன் இணைந்த அத்தியாவசியத்தின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய 5,882 ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதித்துள்ளது.

அரசாங்க சேவையின் 5,882 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவேன்

  • முதலீட்டாளர்கள் எந்த தரகுப் பணமும் செலுத்தாமல் முதலீடு செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம்.
  • தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி நிறைவில் அழிவுகரமான அரசியல் மீண்டும் தலைதூக்க வாய்ப்பில்லை.
  • இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் 26வது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கை தொழில்முனைவோர் உலக சந்தையில் தங்கள் பங்கைக் கைப்பற்றுவதற்குத் தேவையான ஆதரவை வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

உலக சந்தையில் இலங்கை தொழில்முனைவோருக்கான இடத்தை எட்டுவதற்கு தேவையான ஆதரவை வழங்குவேன்

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவர்களின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டு வரும் நிலையில், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.

தரவரிசைப்படுத்தப்பட்ட மருத்துவ அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2024/2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பானது

இன்று (11) நள்ளிரவு 12.00 மணி முதல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் அனைத்தும் முழுமையாக முடியடையும் வரை, மேலதிக வகுப்புக்களை, விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துதல் என்பன தடை செய்யப்பட்ள்ளன என்று பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2024/2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பானது

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை நடாத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பெருவிழாவை வெற்றிகரமாக நடாத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய பெருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன

தொழில்முனைவு மற்றும்  உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்கம் தொடர்பான  ஊக்குவிப்பிற்காக  அலோ பிளாக் இலங்கைக்கு வருகை 

இலங்கை முதலீட்டிற்கு உகந்த இடம் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டுவதில் பங்காளராகுவதே எதிர்பார்ப்பு 

தொழில்முனைவு மற்றும்  உயிரியல் தொழில்நுட்ப புத்தாக்கம் தொடர்பான  ஊக்குவிப்பிற்காக  அலோ பிளாக் இலங்கைக்கு வருகை 

2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்

2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்

FB IMG 1741625421725

2025 மார்ச் பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளி பாத யாத்திரைக் காலம் என்பவற்றுக்காக விசேட புகையிரத சேவைத் திட்டம்
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]