All Stories

ஜனாதிபதியின் வியட்நாம் அரச விஜயம் 04 ஆம் திகதி ஆரம்பம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மே 04 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக, ஜனாதிபதி மே 03 ஆம் திகதி இரவு நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் 

மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். 

உலக வங்கி நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இணைப்பு மற்றும் அபிவிருத்தி உள்ளடங்களான ( Inclusive Connectivity and Development) திட்டத்தின் ஊடாக இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பான பெறுகை செயற்பாடுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாத்தறை மாவட்டத்தின் 19 வீதி அபிவிருத்திக்காக 3, 239 மில்லியன் ரூபாய் 

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தில் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன 2025.04.30ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப் படுத்தினார்.

குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிப்பு

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லுயுடீஆ ஜகம்பத் அவர்களினால் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் நேற்றை தினம் (01.05.2025) மு. ப 11.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

தெல்லிப்பளை மற்றும் பருத்தித்துறை பிரதேசத்தின் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 40.7 ஏக்கர் காணி விடுவிப்பு

வாக்களிப்பு செயற்பாடுகளின் போது இயலாமைக்குட்பட்ட வாக்காளர்களுக்கு அவசியமான வசதிகள் வழங்குதல்

உள்ளூர் அதிகார சபைகளுக்கான வாக்களிப்பு செயற்பாடுகளின் போது எந்தவித அசௌகரியங்களுமின்றி இயலாமைக்குட்பட்ட வாக்காளர்களக்கு அவசியமாக வசதிகள் வழங்குவதை உறுதிசெய்துகொள்ளும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்களிப்பு செயற்பாடுகளின் போது இயலாமைக்குட்பட்ட வாக்காளர்களுக்கு அவசியமான வசதிகள் வழங்குதல்

பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியை சந்தித்தார்

தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு கலந்துரையாடலின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொத்தா (ஓய்வு) செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 29) பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீரை சந்தித்தார்.

பாதுகாப்பு செயலாளர் பாகிஸ்தான் பொருளாதார விவகார அமைச்சர் மற்றும் இராணுவத் தளபதியை சந்தித்தார்

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

மழை நிலைமை:

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை அறிக்கை

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும் வீசும் காற்று ஒடுங்கும் இடம்) தீவின் வானிலையை பாதித்துக் கொண்டு இருக்கின்றது.

இன்றைய வானிலை அறிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனின் திடீர் மரணம் குறித்து...

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கல் ஆணைக்கழுவினால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவனின் திடீர் மரணம் குறித்து...

உள்ளூர் அதிகார சபை தேர்தல்களுக்கான  அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (30)  இடம் பெற்றது.

உள்ளூர் அதிகார சபை தேர்தல்களுக்கான  அதிகாரம் அளிக்கப்பட்ட முகவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு

பிரதமரின் மே தினச் செய்தி

உழைக்கும் மக்களின் வியர்வை, இரத்தம் மற்றும் உயிர்த் தியாகங்கள் நிறைந்த வேதனையான வரலாற்றை முடிவுக்குக் கொண்டு வந்து, ஒரு வெற்றி ஆண்டில் ஒரு மக்கள் அரசாங்கத்தின் கீழ் 139வது சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

பிரதமரின் மே தினச் செய்தி

"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேசியத் திட்டம்

 

"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேசிய அளவிலான திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (30) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நாட்டில் வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

விபத்து தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வீதிப் பயன்பாட்டில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் காலத்தின் தேவை என்பதை இனங்கண்டு, கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தேசியத் திட்டம் தயாரிக்கப்பட உள்ளது.

நாட்டில் சமூக, சுற்றாடல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலம் சமூகத்தை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன், கிளீன் ஸ்ரீ லங்கா திட்டம் செயல்படுத்தப்படுவதுடன் அங்கு, ஒழுக்கமான சமூகத்தையும் பிரஜைகளையும் கட்டியெழுப்புவதில் முதன்மை கவனம் செலுத்தப்படுகிறது.

இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு,  வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள், சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் சமூக மற்றும் நெறிமுறைகள் பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் (அவசர சேவைகள்) வைத்தியர் இந்திக ஜாகொட, மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சிவகுமார் மற்றும் பேராசிரியர் எச்.ஆர். பசிந்து, பிரதிப் பொலிஸ் மா அதிபர் (மோட்டார் வாகனங்கள்) மற்றும் குறித்த அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2025-04-30

"கிளீன் ஸ்ரீ லங்கா" வேலைத்திட்டத்தின் கீழ் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேசியத் திட்டம்

ஜனாதிபதியின் மே தின செய்தி

1886 ஆம் ஆண்டு மே மாதம் 01 ஆம் திகதி அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில், 08 மணி நேர வேலை நேரத்தைக் கோரி போராட்டம் நடத்தியபோது இடம்பெற்ற அடக்குமுறை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் இரத்தம் சிந்திய தொழிலாளர்களை நினைவுகூறும் வகையில், 1889 ஆம் ஆண்டு கூடிய இரண்டாவது கம்யூனிஸ சர்வதேசம், அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 01 ஆம் திகதியை சர்வதேச தொழிலாளர் தினமாக பிரகடனப்படுத்த முடிவு செய்தது.

ஜனாதிபதியின் மே தின செய்தி
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]